கடமலைக்குண்டு, ஆக.6- தேனி மாவட்டம், வருசநாடு முதல் வாலிப்பாறை வரையிலான சுமார் 5 கிலோ மீட்டர் தொலை விலான தார்ச்சாலை வருசநாடு வனச்சரகத்திற்குள்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. இதனால் சாலையைச் சீரமைக்கவும், புதுப் பிக்கவும் வருசநாடு வனத்துறை யினர் தடைவிதித்துள்ளனர். இதனால் குறிப்பிட்ட அளவிலான சாலை அதிகளவில் சேதம் அடைந்து போக்குவரத்திற்குத் தகுதியற்றதாக காணப்படுகிறது. மேலும் சேதமடைந்த சாலையால் தொடர்ந்து வாகன விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதி காரிகள் உரிய நடவடிக்கை எடுத்து புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.