districts

img

தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, நடவடிக்கை எடுத்திடுக!

போலீஸ் எஸ்.பி.யிடம் சிபிஎம், தீ.ஓ.முன்னணி வலியுறுத்தல் 

தேனி, ஆக.10-  பெரியகுளம் அருகே தூக்குப்போட்ட நிலையில் மர்மமான முறையில் காதலர்கள் இறந்த விவகாரத்தில் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு  பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது. தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே காந்தி நகரை சேர்ந்தவர் தலித் கூலித் தொழி லாளி வேலவர் மகன் மாரிமுத்து (வயது 22) .  அதே பகுதியின் மாற்று சமூகத்தை சேர்ந்த  சம்பத்குமார் மகள் மகாலட்சுமி ( வயது 17 ).  இவர்கள் இருவரும் கடந்த மூன்று ஆண்டுக்கும் மேலாக காதலித்து வந்துள்ளார்கள். இரண்டு பேர்களும் திருமணம் செய்து கொள்ள வேண்  டும் என்று முயற்சித்துள்ளார்கள். இதனால் மாரி முத்துவின் மீது இருமுறை போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மகாலட்சுமிக்கு திரு மண வயது இன்னும் வராததால் அதில் உறுதி யான முடிவு எதுவும் எடுக்க முடியாத நிலையில்  காதலர்கள் இருந்துள்ளார்கள். மேலும் இரு தரப்பு வீட்டிலும் எதிர்ப்பு இருந்ததாகவும் தெரி கிறது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 3 ஆம் தேதி  மகாலட்சுமி,காதலன் மாரிமுத்துவின் வீட்டிற்கு  சென்று, என்னை திருமணம் செய்து கொள்  என்று வற்புறுத்தியுள்ளார் .இதனால் மாரி முத்து குடும்பத்தார் காவல் நிலையத்தில் புகார் செய்து காவல் துறையினர் தலையிட்டு பெண் வீட்டாருடன் பேசி மகாலட்சுமியை அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் ஆகஸ்ட் 5 ஆம்  தேதி காலை காந்தி நகர் அருகே உள்ள தனியார்  மாந்தோப்பில் காதலர்கள் மாரிமுத்துவும் ,மகா லட்சுமியும் ஒரே மரத்தில் தூக்கு போட்ட நிலை யில் மர்மமான முறையில் இறந்த நிலையில் கிடந்தனர்.  இச்சம்பவத்தில் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு  பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தி மாரிமுத்துவின் உடலை வாங்க மறுத்து  அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவி னர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்

கே.பாலபாரதி -த.செல்லக்கண்ணு ஆறுதல் 

இதனிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.பால பாரதி ,தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, கட்சி யின் தேனி மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணா மலை உள்ளிட்ட தலைவர்கள், பெரியகுளத்தில்  காதலர்கள் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் இறந்த மாரிமுத்துவின் குடும்பத்தை சேர்ந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

கதறிய தாய் 

அப்போது தலைவர்களிடம் பேசிய மாரி முத்துவின் தாயார், காவல்நிலையத்தில் நடந்த  பேச்சுவார்த்தையில் மகாலட்சுமி அவரது வீட்டிற்கு செல்ல விருப்பம் இல்லை .அரசு  ஹோமுக்கு அனுப்ப வேண்டும். மாரிமுத்துவை தான் திருமணம் செய்வேன் என திரும்பத் திரும்ப  கூறினார். காவல் நிலையத்திலிருந்து வீடு திரும்  பிய போது மகாலட்சுமியை அவரது தாயார் கடும் வார்த்தைகள் கூறி நடுரோட்டில் தாக்கி னார். காவல்துறை ஹோமுக்கு அனுப்பியிருந் தால் இந்த சம்பவம் நடந்திருக்காது .சம்பவம் நடப்பதற்கு முதல் நாள் எனது கணவருக்கு மகாலட்சுமி போன் செய்து, மாரிமுத்துவை தனி யாக அனுப்ப வேண்டாம், பாதுகாப்புடன் உங்க ளுடன் தங்க வைத்துக் கொள்ளுமாறு தெரி வித்தார். இவர்கள் தற்கொலை செய்து கொள்ள  வாய்ப்பு இல்லை. எனது மகன் இறப்பிற்கு கார ணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து தலைவர்கள் பெரிய குளம் கோட்டாட்சியர் முத்து மாதவனை நேரில்  சந்தித்து விபரங்களை கேட்டறிந்தனர்.

தேனி எஸ்.பி.யிடம் புகார் 

தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் பிரவிண் உமேஷ் டோங்காரேவை நேரில் சந்தித்து விபரங்களை எடுத்துக்கூறினர் .பின்னர்  கட்சியின் சார்பில் இது தொடர்பாக புகார் மனு  அளிக்கப்பட்டது .அதில், காதலர்கள் இறந்து கிடந்த நிலையை பார்த்து உறவினர்கள் ,பொது மக்கள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கருது கிறார்கள். பெண் வீட்டார் காதலுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் .இறப்பிற்கு உண்மையான காரணங்களை கண்டறிவது டன், இந்த சம்பவத்தை எஸ்சி /எஸ்டி வன்  கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்  பதிவு செய்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க  வேண்டும். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு தரப்பில் நிவாரண உதவி வழங்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர். தலைவர்களுடன் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.வெங்கடேசன் , சி.முருகன்,  எம்.ராமச்சந்திரன் ,சு.வெண்மணி ,பெரியகுளம்  தாலுகா செயலாளர் எம்.வி.முருகன் , தீண் டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலா ளர் இ.தர்மர் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

இன்று ஆர்ப்பாட்டம் 

காதலர்கள் மர்மமான முறையில் இறந்த  சம்பவத்தில் குற்றவாளிகளை கண்டறிந்து நட வடிக்கை எடுக்க வேண்டும் .தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி பெரிய குளத்தில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு கே.எஸ்.கே .கேண்டீன் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணா மலை தெரிவித்துள்ளார்.