districts

img

மதுரை மண்டல அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனைகளில் தொழிற்நுட்பப் பிரிவில் காலியாக உள்ள பணி

மதுரை மண்டல அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனைகளில் தொழிற்நுட்பப் பிரிவில் காலியாக உள்ள பணியிடங்ககளை நிரப்ப வேண்டும். தேவையான உபகரணங்கள், உதிரிபாகங்கள் வழங்க வேண்டும். தொழிற் நுட்பப் பணியாளர்கள் மீது வேலைப்பளுவை திணிக்கக்கூடாது. உரிய இன்சென்டிவ்வை சரியான முறையில் மேம்படுத்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியறுத்தி திங்களன்று புறவழிச்சாலையில் உள்ள மதுரை அரசு போக்குவரத்து தலைமையகம் முன்பு கிளைச் செயலாளர் எம். செந்தில்குமார் தலைமையில் தர்ணா நடைபெற்றது. மதுரை சங்க பொதுச் செயலாளர் ஏ. கனகசுந்தர், துணைப் பொதுச் செயலாளர்கள் எஸ்.மணிமாறன், எஸ். செல்வராஜ், டி.ஏ.முரளீதரன், பி.மகாதேவன், மீ.லெனின், துணைத் தலைவர் சந்திரசேகரன், பொருளாளர் டி.மாரியப்பன், சம்மேளன துணைத் தலைவர் வீ. பிச்சை, சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா.லெனின் உட்பட ஏராளமானே தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.