வி.சி.க. திருமாவளவனுக்கு மிரட்டல்: பாஜக சுசீந்திரனுக்கு நிபந்தனை ஜாமீன்
மதுரை, அக் 18- விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமா வளவனின் கருத்துக்கு மிரட்டும் வகையில் பதில் அளித்த விவகாரத்தில் பாஜகவின் மதுரை மாவட்ட தலைவர் சுசீந்திரனுக்கு உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் முன் ஜாமின் வழங்கியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் மதுரை மாவட்ட தலைவர் சுசீந்திர னிடம், இந்து மக்கள் தொடர்பாக விடுதலை சிறுத்தை கள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தது தொடர்பாக கருத்து கேட்கப்பட்டது. அப்போது அவர் மிரட்டல் விடும் விதமாகவும், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் விதமாகவும் பேசினார். இது தொடர்பாக, சுசீந்திரன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், சுசீந்திரன், முன் ஜாமீன் கோரி உயர்நீதி மன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி நக்கீரன் முன்பாக செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது. பாஜகவின் மதுரை மாவட்ட தலைவர் சுசீந்திரனுக்கு நிபந்தனையுடன் முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டனர்.வழக்கு நடைபெறும் மதுரை ஜே.எம்-2 நீதிமன்றத்தில், பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். மறு உத்தரவு வரும் வரை சிலைமான் காவல் நிலையத்தில் காலை 10. 30 மணிக்கு நாள் தோறும் ஆஜராகி கையெழுத்து இட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.
பாசனக்குழாய் உடைப்பை கண்டித்து சின்னமனூரில் மறியல் 178 விவசாயிகள் கைது
தேனி ,அக்.18- சின்னமனூரில் பாசனக்குழாய் உடைக்கப்பட்டதை கண்டித்து நடைபெற்ற மறியலில் பங்கேற்ற 178 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ள முத்துலா புரம், வெள்ளையம்மாள்புரம், ஓடைப்பட்டி, அப்பிபட்டி, எரசக்கநாயக்கனூர் உள்ளிட்ட கிராமங்கள் மேட்டுப் பாங்கான பகுதியில் அமைந்துள்ளன. இதனால் முல்லைப் பெரியாற்றின் மூலம் பாசன வசதி பெற முடியாத நிலை உள்ளது. ஆகவே ஆற்றின் கரைப்பகுதியில் ஆழ்குழாய் அமைத்து குழாய் மூலம் நீரை கொண்டு சென்று பாசனம் செய்து வருகின்றனர். அனுமதியின்றி குழாய்களை பதித்ததாகக் கூறி நெடுஞ்சாலைத்துறை கடந்த மாதம் இக்குழாய்களை அகற்றியது. இதனால் சுமார் 2 ஆயிரத்து 500ஏக்கரிலான பயிர்கள் வாடத் தொடங்கின. பாசனக் குழாய்களுக்கு மீண்டும் இணைப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சின்னமனூர் உத்தம பாளையம் சாலையில் மறியல் போராட்டம் நடை பெற்றது.பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட 178 விவசாயி களை காவல்துறையினர் கைது செய்தனர்.
தேனி மாவட்டத்தில் கனமழை சுவர் இடிந்து முதியவர் பலி
தேனி, அக்.18- தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக தேவாரம் அருகே சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த முதியவர் உயிரிழந்தார். தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் ஆறு மற்றும் ஓடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படு கிறது. இந்த நிலையில், தேனி மீனாட்சிபுரத்தில் துக்க வீட்டிற்கு சென்று விட்டு, வீட்டுக்கு நடந்து வந்து கொண்டி ருந்த அதே ஊரைச் சேர்ந்த மாயழகன் மகன் ஜெக நாதன்(65), சாலையில் மழையால் பாதிக்கப்பட்டிருந்த சுவர் இடிந்து விழுந்ததில் படுகாயமடைந்தார். ஆபத்தான நிலையில், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட ஜெகநாதன் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தேனி, குட்செட் தெருவில் மழையால் வீடு இடிந்து விழுந்ததில் கூலித் தொழிலாளி இளவரசி(51) என்பவர் காயமடைந்து, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். பெரியகுளத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை அருகே உள்ள கால்வாய் கரையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. ஜெயமங்கலத்தில் வேட்டுவன்குளம் கண்மாய்க்கான நீர் வரத்து ஓடையில் உடைப்பு ஏற்பட்டு,தண்ணீர் விவசாய நிலங்களுக்குள் செய்கிறது. இவற்றை சீரமைக்கும் பணியில் பொதுப் பணித்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
வைகை அணையில் உபரி நீர் திறப்பு 1369 கன அடியாக குறைப்பு
தேனி, அக். 18- நீர் வரத்து குறைந்த நிலையில் வைகை அணை யிலிருந்து திறக்கும் உபரிநீரின் அளவு செவ்வாயன்று மாலை 5 மணிக்கு விநாடிக்கு 1,369 கன அடியாக குறைக்கப்பட்டது. வைகை அணை நீர்மட்டம் 70 அடியாகவும், அணைக்கு தண்ணீர் வரத்து விநாடிக்கு 7 ஆயிரம் கன அடியாகவும் இருந்த நிலையில் திங்கள்கிழமை, அணையிலிருந்து வைகை ஆற்றில் விநாடிக்கு 7 ஆயிரம் கன அடி வீதம் உபரிநீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது வைகை அணைக்கு தண்ணீர் வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால், செவ்வாய்கிழமை காலை 10 மணிக்கு அணையிலிருந்து வைகை ஆற்றில் திறக்கும் உபரிநீரின் அளவு விநாடிக்கு 5,875 கன அடியாகவும், பிற்பகல் ஒரு மணிக்கு விநாடிக்கு 2,328 கன அடியாகவும், பிற்பகல் 3 மணிக்கு விநாடிக்கு 1,733 கன அடியாகவும் குறைக்கப்பட்டது. பின்னர், செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி முதல் அணையிலிருந்து வைகை ஆற்றில் விநாடிக்கு 1,369 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதியில் திறக்கப்படும் தண்ணீர் செவ்வாய்கிழமை, விநாடிக்கு 511 கன அடியாக குறைக்கப்பட்டது.
இன்றைய நிகழ்ச்சி
திண்டுக்கல்லில் பருத்தி விவசாயம் மற்றும் பஞ்சாலை தொழில் பாதுகாப்பு கருத்தரங்கம். இடம்: திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகில் உள்ள வி.ஜி.எஸ்.மகால். முன்னாள் எம்எல்ஏ கே.பாலபாரதி. மாநில பஞ்சாலை தொழிலாளர் சம்மேளன துணைத்தலைவர் சி.பத்மநாபன். தென்னிந் திய பனியன் உற்பத்தியாளர் சங்க பொதுச்செயலா ளர் கீதாஞ்சலி எஸ்.கோவிந்தப்பன், கோவை ஹில் சில்வர் ஏற்றுமதியகம் இயக்குநர் அழகன் கருப்பணன்.
வீட்டில் பட்டாசு பதுக்கியவர் கைது
திருவில்லிபுத்தூர்,அக்.18- திருவில்லிபுத்தூர் இந்திரா நகரில் வசிப்பவர் கிருஷ்ணசாமி (வயது 60). இவர் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார் சம்பவத்தன்று இவரது வீட்டில் அரசு அனுமதி இல்லாமல் மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் எளிதில் தீப்பற்றக்கூடிய பட்டாசு வகைகள் 534 பெட்டிகள் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து நகர் காவல் சார்பு ஆய்வாளர் கணேசன் விரைந்து சென்று பட்டாசு பெட்டிகளை பறிமுதல் செய்து கிருஷ்ணசாமியை கைது செய்தனர்.மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வைகை ஆற்று வெள்ளத்தில் மூதாட்டி உடல் மீட்பு
மதுரை, அக் 18- வைகை ஆற்றுவெள்ளப்பெருக்கில் அடித்து வரப்பட்ட 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி உடலை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். தற்போது வைகை அணையின் நீர்மட்டம் 70 அடி எட்டியுள்ளதால் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. 7000 ஆயிரம் கன அடிநீர் வெளியேறி வருகிறது. கரையோர பகுதிகளில் காவல்துறை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலை யில் 60 வயது மதிக்கத்தக்க ஒரு மூதாட்டி உடல் ஆரப்பாளை யம் பகுதியில் உள்ள வைகை ஆற்றில் மிதந்தது. உடலை தீயணைப்புத் துறையினர் மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வீட்டின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் நகை, பணம் கொள்ளை
தூத்துக்குடி, அக். 18 தூத்துக்குடி முத்தையாபுரம், தவசிபெருமாள் சாலையைச் சேர்ந்தவர் நடராஜன் மனைவி பபிதா (45). நடராஜனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். அவரது மனைவி பபிதா உடனிருந்து கண வரை கவனித்து வருகிறார். இந்நிலையில் திங்களன்று அவர் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப் பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த ரூ.3.5 லட்சம் பணம், ரூ.1லட்சம் மதிப்புள்ள வெள்ளி பாத்தி ரங்கள், 12 கிராம் தங்க நகை ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும். இதுகுறித்து முத்தையா புரம் காவல் நிலையத்தில் பபிதா புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் ஜெயசீலன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஆற்று மணல் திட்டில் சிக்கிய 3 பேர், 370 ஆடுகள் மீட்பு
அரியலூர், அக்.18 - அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் உள்ள அணைக்குடி கிராமத்தை சேர்ந்தவர்கள் அண்ணாமலை (50), ஆறுமுகம் (58), ராஜூ (20). இவர்கள், ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மழையின் காரணமாக வயல் பகுதிகள் சேறும் சகதியுமாக இருப்பதால், கொள்ளிடம் ஆற்றின் நடுப்பகுதியில் உள்ள மணல் திட்டில் அண்ணாமலைக்கு சொந்தமான 370 ஆடுகளுடன் ஞாயிறன்று இரவு தங்கினர். காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழையின் காரணமாக, கடந்த 2 தினங்களாக கொள்ளிடம் ஆற்றில் அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், வெளியில் வர முடியாமல் தவித்த 3 பேர் மற்றும் ஆடு களை மீட்க ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறையினர் திங்களன்று காலை முதல் போராடினர். முதல் கட்டமாக 3 நபர்களை மீட்டனர். பின்னர் ஆடுகள் அனைத்தையும் பத்திரமாக மீட்டனர்.
தென் மண்டலத்தில் காவல்துறை கைப்பற்றிய ரூ.10 கோடி கஞ்சா பொருட்கள் எரிப்பு
விருதுநகர்,அக்.18- விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே அ.முக் குளம் உண்டுறுமி, கிடாக் குளம் பகுதியில் அமைந் துள்ள மருத்துவ கழிவு களை எரியூட்டும் ஆலை யில் தென் மண்டல பகுதி களான மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தமிழக காவல்துறையி னரால் ஆப்ரேஷன் 2.0 கஞ்சா வேட்டையில் கைப் பற்றப்பட்ட சுமார் 10 கோடி மதிப்பிலான போதைப் பொ ருட்கள் எரித்து அழிக்கப் பட்டன. தமிழக காவல்துறை கூடுதல் டிஜிபி மகேஸ் குமார் அகர்வால் தலைமை யிலும், மதுரை சரக டிஜஜி பொன்னி, திண்டுக்கல் சரக டிஐஜி ரூபேஷ்குமார் மீனா, விருதுநகர் மாவட்ட எஸ்.பி மனோகர், மதுரை மாவட்ட எஸ்.பி சிவபிரசாத், திரு நெல்வேலி மாநகர துணை ஆணையாளர் ஸ்ரீனிவாசன், திருச்சுழி டி.எஸ்.பி ஜெகநா தன், நரிக்குடி காவல் ஆய்வா ளர் ராமநாராயணன் ஆகி யோர் முன்னிலையில் சுமார் 980 கிலோ எடை கொண்ட சுமார் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை எரித்து அழிக்கப்பட்டது. இதுகுறித்து தமிழக காவல்துறை கூடுதல் டிஜிபி மகேஸ்குமார் கூறு கையில், கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழக முதல மைச்சர் நடத்திய ஆலோ சனை கூட்டத்தில் போதையில்லாத தமிழ கத்தை உருவாக்க வேண்டும் என தெரிவித்தார். அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் போலீ சாரால் போதை ஒழிப்பு சம்பந்தமாக தீவிர நடவ டிக்கை எடுக்கப்பட்டது. இதில் குறிப்பாக ஆப்ரே ஷன் 2.0 கஞ்சா ஒழிப்பு நடவடிக்கைகளில் தமிழக முழுவதும் 21 ஆயிரம் கிலோ கஞ்சா பிடிக்கப்பட்டது. இது கடந்த ஆண்டை விட அதிகமாக உள்ளது . கஞ்சா விற்றவர்களை பிடித்து முறையாக தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் 16 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கப் பட்டுள்ளது என்றார்.
தனியார் சிமெண்ட் ஆலையின் லாரி மோதி விவசாயி உயிரிழப்பு உறவினர்கள், பொதுமக்கள் சாலை மறியல்
அரியலூர், அக்.18 - அரியலூர் மாவட்டம் காட்டுப்பிரிங்கியம், அய்யாநகரைச் சேர்ந்தவர் விவசாயி ராஜாங்கம் (67). இவரது மனைவி பச்சை யம்மாள். இவர் பெரியநாகலூர் பாலக்கரை யில் உள்ள ஒரு விவசாயி நிலத்திற்கு கடலை பிரித்தெடுக்கும் பணிக்கு சென்ற, தனது மனைவி பச்சையம்மாளை இரவு இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு அழைத்து வந்து கொண்டிருந்தார். அப்போது பெரியநாகலூர் பாலக்கரை பெட்ரோல் பங்க் அருகே அரியலூர் - ஜெயங்கொண்டம் சாலையில் சென்றபோது, பின்னால் சிமெண்ட் ஆலையிலிருந்து சுண்ணாம்புக் கல் ஏற்றி வந்த டிப்பர் லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் ராஜாங்கம் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். விபத்தை ஏற்ப டுத்திய லாரி ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். விபத்து குறித்து அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், லாரி கண்ணாடி களை உடைத்து, லாரிக்கு தீ வைக்க முயற்சித்தனர். அருகில் இருந்தவர்கள் இதனை தடுத்தன. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத் துக்குச் வந்த அரியலூர் காவல் ஆய்வா ளர்கள் மற்றும் காவல்துறையினர் சடலத்தை மீட்க முயற்சித்தனர். ஆனால் பொது மக்கள் உடலை ஒப்படைக்க மறுத்து, லாரிகளை இவ்வழியே இயக்கக் கூடாது என வலியுறுத்தி சாலையில் மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். மேலும் அரியலூர் ஆர்டிஓ, தாசில்தார் பொதுமக்களிடம் நீண்ட நேரம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, இச்சம்ப வம் குறித்து புதனன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிமெண்ட் ஆலை அதிகாரி கள், லாரி உரிமையாளர்கள் மற்றும் பாதிக்கப் பட்ட மக்கள் ஆகியோர் இடையே பேச்சு வார்த்தை நடத்துவது என்றும், பொதுமக்க ளின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவ டிக்கை எடுக்கப்படும் என கூறினர். இதை யடுத்து பொதுமக்கள் இறந்தவரின் உடலை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். சிமெண்ட் ஆலைகளுக்கு இயக்கப் படும் லாரிகளுக்கு தனி சாலை அமைக்க வலி யுறுத்தி கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு திங்களன்று சாலை மறியலில் ஈடுபட்ட னர். பின்னர் போலீசாரின் பேச்சுவார்த்தையை அடுத்து ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துச் சென்றனர்.
திண்டுக்கல்:தனியார் பள்ளியில் மாடியிலிருந்து விழுந்து மாணவி படுகாயம்
திண்டுக்கல், அக்.18- திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலை யில் உள்ள அச்சுதா பப்ளிக் பள்ளி மூன்றா வது மாடியில் இருந்து விழுந்த மாணவி படுகாயத்துடன் தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு முதுகு தண்டுவட சிகிச்சை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அச்சுதா பப்ளிக் பள்ளியில் மாரம்பாடி பகுதியை சேர்ந்த மாணவி பதினோராம் வகுப்பில் சேர்ந்து விடுதியில் தங்கி படித்து வருகிறார். இவர் திங்களன்று இரவு 8 மணி அளவில் பள்ளியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மூன்றாவது மாடிக்கு தண்ணீர் குடிக்க சென்றதாகவும் அங்கிருந்து தவறி விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மாணவி படுகாயமுற்று முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு உள்ளார். இதனை அடுத்து பள்ளி நிர்வாகம் தனியார் மருத்துவமனையில் அவசர அவசரமாக சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். இது தொடர்பாக குழந்தை கள் பாதுகாப்பு அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை செய்து வருகிறார்கள்.