ஊதிய உயர்வு வழங்க மறுத்த உப்பு நிறுவன மேலாண்மை இயக்குநரைக் கண்டித்து இராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் உப்பள தொழிலாளர்கள் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை ஆர்ப்பாட்டத்துடன் தொடங்கியுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் உப்பு நிறுவன சங்கத் தலைவர் கே. பச்சமால் செயலாளர், வி.குமரவடிவேல், முருகேசன், காட்டுராஜா, முருகவேல், தனிராம், காளீஸ்வரன் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.