விருதுநகர், ஆக.13- விருதுநகர், காமராஜர் பைபாஸ் சாலையில் உள்ள பாதாளச் சாக்கடை தொட்டிகள் நிரம்பியதால் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. விருதுநகரில் பிரதான சாலையாக காமராஜர் பைபாஸ் சாலை உள்ளது. இதன் வழியாக கட்டையாபுரம், ஆத்துமேடு, கருப்பசாமி கோவில் தெரு, சிவந்திபுரம், அல்லம்பட்டி, மாத்தநாயக்கன்பட்டி சாலை, குல்லூர்சந்தை சாலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொது மக்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில், காமராஜர் பைபாஸ் சாலையில் உள்ள பாதாளச் சாக்கடை குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கழிவுநீரா னது, மேன்வெல்கள் வழியாக வெளி யேறி வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் துர்நாற்றம் வீசு வதோடு, சுகாதார சீர்கேடு ஏற்பட் டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் பல முறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென கூறப்படுகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம், உட னடியாக பாதாளச் சாக்கடை அடைப்புகளை சீர் செய்து சுகாதா ரத்தை பாதுகாத்திட உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டுமென அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.