மதுரை, டிச.7- தமிழகத்தி லுள்ள 10 ரயில் அஞ்சல் அலுவல கங்களை மூடும் முடிவை, உடனடி யாகத் தலையிட்டு நிறுத்த வேண்டும் என்று ஒன்றிய தக வல் தொடர்பு அமைச் சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடா ளுமன்ற மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தி யுள்ளார்.
இதுதொடர்பாக ஜோதிராதித்ய சிந்தி யாவுக்கு கடிதம் ஒன்றையும் சு. வெங்க டேசன் எழுதியுள்ளார். அதில் அவர் கூறி யிருப்பதாவது:
வாழ்க்கையோடு பிணைந்த அஞ்சல் அலுவலகங்கள்
இந்தியாவின் ரயில் அஞ்சல் அலுவல கங்கள் இந்திய மக்களின் வாழ்க்கை யோடு பின்னிப் பிணைந்தவை.
கடைசி நிமிடத்தில் அஞ்சல் அனுப்ப விரும்புபவர்கள் கூட ரயில் நிலையத்திற்கு ஓடிச்சென்று சேர்த்து விடுவது இந்திய மக்களின் இனிமையான அனுபவங்கள்.
தனியார் மயமும், தனியார் கூரியர்கள் வருகையும் இந்திய அஞ்சல் துறையை நோக்கி தொடர்ந்து தாக்குதல்கள் தொடுத்து வருகின்றன. படிப்படியாக மக்களைத் தனியாரை நோக்கி தள்ளுகிற வேலையை ஒன்றிய அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது.
வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்காத முடிவு
அத்தாக்குதல்களின் ஒரு பகுதியாக ஆர்எம்எஸ் பதிவு அஞ்சல் அலுவலகங்க ளையும், விரைவு அஞ்சல் அலுவலகங்க ளையும் ஒன்றாக இணைக்கப் போவதாக இந்திய அஞ்சல் துறை 17.10.2024 ஆணை யின் மூலம் அறிவித்து இருக்கிறது.
இரண்டு சேவைகளும் வெவ்வேறு நோக்கங்களுக்காக வெவ்வேறு வகை யிலான வாடிக்கையாளர்களுக்காக உரு வாக்கப்பட்டவை. இரண்டையும் இணைப் பது எந்த வகை வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்காது. குறிப்பிட்ட சேவை மீதான கூர் கவனத்தையும் பாதிக்கும். சாமானிய மக்கள் மீது சுமையையும், வேகமான சேவை விரும்புகிற வாடிக்கையாளர் களுக்கு தாமதத்தையும் உருவாக்குகிற முடிவாகும் இது.
நாடு முழுவதும் 93 அலுவலகங்கள் மூடலா?
இந்தியா முழுமையும் 93 அலுவல கங்கள் மூடப்படும் என்றும் அதில் பத்து அலுவலகங்கள் தமிழ்நாட்டில் உள்ளது என்றும் அறிய வருகிறோம்.
ஆகவே, உடனடியாக தலையிட்டு இம் முடிவை நிறுத்த வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் சு. வெங்க டேசன் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.