districts

img

பாஜகவுக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது உதயகுமார் பேட்டி

மதுரை, ஆக. 31 - அண்ணாமலை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டதன் மூலம் பாஜகவுக்கு சுதந்திரம் கிடைத்துள்ள தாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

“பாஜக தலைமையே அண்ணா மலையை எப்படி அனுப்பி வைப்பது என தெரியாமல் தவித்தனர். அண்ணா மலையின் தற்போதைய வெளிநாட்டு பயணத்தால் தமிழகம் அமைதி நிலைக்கு திரும்பியுள்ளது. பாஜகவில் தற்போது பொறுப்புக்கு வந்துள்ள வர்கள் திறமை, அனுபவம், பண்பாடு மிக்கவர்கள் ஆவார்கள். அண்ணா மலை வெளிநாட்டு பயணத்தால் பாஜக தொண்டர்களுக்கு சுதந்திரம் கிடைத் துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.