தேனி , டிச. 9- போடி-தேனி அகல ரயில் பாதையில் நவீன ரயில் பெட்டிகளுடன் வெள்ளிக் கிழமை சோதனை ஓட்டம் நடைபெற்றது. போடி-மதுரை அகல ரயில்பாதையாக மாற்றும் திட்டத்தில் போடி-தேனி வரை யிலான 15 கி.மீ. தூர அகல ரயில்பாதை பணிகள் முடிவடைந்தன. இந்த பாதையில் ரயில் இன்ஜின் மட்டும் வைத்து இதுவரை சோதனை ஓட்டம் நடைபெற்றது. இறுதிக் கட்ட சோதனை ஓட்டமாக நவீன ரயில் பெட்டி யுடன் கூடிய சோதனை ஓட்டம் வெள்ளிக்கிழ மை நடைபெற்றது. இதில் ரயில் இன்ஜி னுடன் மூன்று பெட்டிகள் இணைக்கப் பட்டிருந்தன. இதில் ஒரு பெட்டி ரயில் பாதையின் அதிர்வு தாங்கும் திறன், குறைபாடுகளை உடனுக்குடன் கண்டறியும் வசதியுடன் கூடிய நவீன பெட்டியாக இருந்தது. இந்த நவீன ஆய்வு பெட்டியின் மூலம் தேனி முதல் போடி வரை முதலில் 60 கி.மீ. வேகத் தில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. நவீன பெட்டியிலிருந்த அதிர்வு கண்டறியும் அமைப்பின் மூலம் ரயில்பாதையின் அதிர்வு களை ரயில்வே பொறியாளர் குழுவினர் சோதனை செய்து உடனுக்குடன் முடிவுக ளை உயரதிகாரிகளுக்கு தெரிவித்தனர். பின்னர் மீண்டும் போடியிலிருந்து தேனிக்கு 125 கி.மீ. வேகத்தில் இயக்கி சோதனை செய்யப்பட்டது. அப்போதும் நவீன பெட்டியிலிருந்த அதிர்வு தாங்கும் திறன் சோதனை அமைப்பின் மூலம் சோதனை நடைபெற்றது. மூன்று ரயில் பெட்டிகளுடன் இயக்கப்பட்ட சோதனை ஓட்டத்தின் போது பொதுமக்கள், மாணவர் கள் ஆரவாரத்துடன் ரயிலை வரவேற்ற னர். போடி ரயில் நிலையத்தில் ரயில் நின்ற போது புகைப்படமும் எடுத்துக் கொண்ட னர். ரயில் சோதனை ஓட்டத்தின்போது ரயில் பாதையில் வாகனங்கள், பொதுமக்கள் குறுக்கே செல்லாமல் இருக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.