districts

img

புதிய பேருந்துகள் வழங்க வேண்டும்

மதுரை, செப்.23-  தமிழ்நாடு அரசு அனைத்துப் போக்கு வரத்துக் கழகங்களுக்கும்  புதிய பேருந்து கள் வழங்க வேண்டுமென அரசு போக்கு வரத்து மதுரை தொழிலாளர் (சிஐடியு)  சங்கம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது. அரசு போக்குவரத்து மதுரை தொழி லாளர் (சிஐடியு) சங்கத்தின் 51- ஆவது ஆண்டுப் பேரவை தே.கல்லுப்பட்டியில்  வெள்ளியன்று  செஞ்சட்டை பேரணியுடன் தொடங்கியது. பேரணியை சிஐடியு மாநி லத் தலைவர் அ.சவுந்தரராஜன், மதுரை  புறநகர் மாவட்டச் செயலாளர் கே.அர விந்தன் ஆகியோர் துவக்கி வைத்தனர்  தொடர்ந்து நடைபெற்ற பொதுப் பேர வைக்கு பி.எம்.அழகர்சாமி தலைமை வகித்  தார். எஸ்.மணிமாறன் அஞ்சலி தீர்மா னத்தை வாசித்தார். வி.இளையராஜா  வர வேற்புரையாற்றினார். வி.கார்த்திகேயன் கொடியேற்றினார்.  சிஐடியு மாநிலத் தலை வர் அ.சவுந்தரராஜன் பேரவையைத் தொடங்கி வைத்தார். 10 மற்றும் 12-ஆம் வகுப்பு வகுப்பு  பொதுத் தேர்வில் சாதனை படைத்த அரசுப்  போக்குவரத்து கழகம் தொழிலாளர்களின்  குழந்தைகளுக்கு ஊக்கத் தொகை வழங்  கப்பட்டது.   நிர்மல் பள்ளிக்கு போக்குவரத்து மதுரை தொழிலாளர்கள் சங்கம் சார்பில்  ரூ.77ஆயிரத்து 500 ரூபாய் நிதியளிக்கப் பட்டது. போக்குவரத்து கலைவாணர் கலைக்குழுவின் திறவு கோல் பென்சன் என்ற நாடகம் நடைபெற்றது இரண்டாம் நாளான சனிக்கிழமை பிரதிநிதிகள் பேரவை நடைபெற்றது. பொதுச் செயலாளர் ஏ.கனகசுந்தர் வேலையறிக்கையையும் பொருளாளர் டி.மாரியப்பன் வரவு செலவு அறிக்கையை யும் சமர்ப்பித்தனர். பேரவையை வாழ்த்தி சிஐடியு மதுரை  மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.லெனின், மதுரை புறநகர் மாவட்டச் செயலா ளர் கே.அரவிந்தன், சம்மேளன துணைத் தலைவர்கள் வீ.பிச்சை, ஜி.ராஜேந்திரன், போக்குவரத்து ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் பொதுச் செயலாளர்

ஆர்.வாசு தேவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி னர். சம்மேளன பொதுச் செயலாளர் கே. ஆறுமுகநயினார் நிறைவுரையாற்றினார். டி.கே.முரளிதரன் நன்றி கூறினார். நிர்வாகிகள் தேர்வு: தலைவர்: பி.எம்.அழகர்சாமி, பொதுச் செயலாளர்: ஏ.கனக சுந்தர், பொருளாளர்: டி.மாரியப்பன், துணைப் பொதுச் செயலாளர்கள்: பி.மகா தேவன், எம்.சந்திரசேகரன், டி.சிவகுமார், வி.செல்வகுமார் உட்பட  துணைத் தலை வர்கள் 12,  செயலாளர்கள் 12, மத்திய  சங்க நிர்வாகிகள் 31, நிர்வாகக் குழு உறுப்பினர்கள் 65, பொதுக்குழு உறுப்பி னர்கள் 109 பேர் என  என மொத்தம் 205 பேர்  தேர்வு செய்யப்பட்டனர். தீர்மானங்கள் தமிழ்நாடு அரசு, போக்குவரத்துக் கழ கங்களுக்கு விரையில் புதிய பேருந்துகள்  வழங்க வேண்டும். ஓய்வு பெற்றவர்க ளுக்கான பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். பணியாளர் பற்றாக்குறை யைக் காரணம் காட்டி  விடுப்பு வழங்க மறுக்கக் கூடாது. போக்குவரத்துக் கழகத்தில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மக ளிர் கட்டணமில்லா பேருந்துகளை மதுரை  மாநகரில் போதுமான அளவிற்கு இயக்க வேண்டும். அனைத்து பணிமனைகளிலும் உள்ள ஓய்வறை, கழிப்பறை, மற்றும்  மின்விசிறி, மின்விளக்குகள், நடைபாதை களை சீரமைக்க வேண்டுமென்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.