இராமநாதபுரம், அக்.4- இராமநாதபுரம் மாவட்ட சாலையோர சந்தை வியா பாரிகள் சங்கம் இணைப்பு (சிஐடியு) சங்கத்தின் அமைப்பு பேரவை கூட்டம் சிஐடியு மாவட்டப் பொருளாளர் ஆர்.முத்துவிஜயன் தலை மையில் நடைபெற்றது. பேரவையை சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.ஏ. சந்தானம் துவக்கி வைத் தார். சிஐடியு மாவட்ட நிர்வா கிகள் ஆர்.வாசுதேவன், என்.பி.செந்தில் ஆகியோர் வாழ்த்தி பேசினர். சிஐடியு மாவட்டச் செயலாளர் எம். சிவாஜி புதிய சங்க நிர்வாகி களை அறிமுகம் செய்து வைத்தார். சாலையோர வியாபாரிகள் சங்க மாநில கன்வீனர் பி.கருப்பையன் நிறைவுரையாற்றினார். கூட்டத்தில், சங்கத்தின் மாவட்டத் தலைவராக ஏ. ஆளடீஸ்வரன், செயலாள ராக ஆர்.முத்துவிஜயன், பொருளாளராக என்.பி. செந்தில், மாவட்டத் துணைத் தலைவர்களாக எம்.ராமு, பிரபாகரன், ஜெயகோபு, கே.பச்சம்மாள், துணைச் செயலாளர்களாக அண்ணா துரை, ராஜபாண்டி, மகேஸ் வரி, அஜ்மல்கான் உட்பட 27 பேர் கொண்ட மாவட்டச் செயற்குழு தேர்வு செய்யப் பட்டது. கூட்டத்தில், சாலை யோர வியாபாரிகளை அடை யாளம் கண்டு அரசு அடை யாள அட்டை வழங்க வேண் டும். வாரச்சந்தை வியாபாரி களை மிரட்டும் ஒப்பந்தக் காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தி இராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட் டன.