திருவில்லிபுத்தூர், அக்.30- ஓய்வு பெற்ற ஊழியர் களுக்கு அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இராஜபாளை யம், திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு ஆகிய அரசு போக்குவரத்து கழக பணிமனைகள் முன்பு சிஐ டியு, ஏஐடியுசி, விசிக தொழி லாளர்கள் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இராஜபாளையத்தில் நடைபெற்ற போராட்டத் திற்கு சிஐடியு தொழிற்சங்க தலைவர் வீரராகவன் தலை மை வகித்தார். ஓய்வு பெற்ற தொழிலாளர் நல அமைப்பு காத்தப்பன், சிஐடியு கன்வீ னர் சுப்பிரமணி, செயலாளர் சன்னாசி, ஏஐடியுசி முத்து ராமலிங்கம், தொழிலாளர் சம்மேளன ராமசாமி, சிபிஎம் நகரச் செயலாளர் மாரி யப்பன் உள்பட பலர் பேசி னர். பஞ்சாலை தொழிலா ளர்கள் சங்க சிஐடியு மாவட்ட செயலாளர் ஜி.கணேசன் நிறைவுரையாற்றினார். திருவில்லிபுத்தூரில் விசிக தொழிலாளர் சங்கம் சார்பில் விருதுநகர் மண்டல பொதுச் செயலாளர் ஜான் பிரிட்டோ தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில், அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க மத்திய சங்க உதவி செயலாளர் முனிஸ்வரன், சிஐடியு ராஜா, கோபால்சாமி, கண்ணன், ஓய்வு பெற்றோர் நல அமைப் பின் கிருஷ்ணமூர்த்தி, சீனி வாசன், ஐஎன்டிசி தங்கமாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வத்திராயிருப்பில் சிஐ டியு தலைவர் முருகன் தலை மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், செயலா ளர் பெரியசாமி கோரிக்கை களை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் லோக நாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.