districts

img

திருப்பரங்குன்றம் மத நல்லிணக்கத்தை பாதுகாப்போம்!

திருப்பரங்குன்றத்தில் பல நூறு ஆண்டுகளாக இந்துக்களும், இஸ்லாமியர்களும் அவரவர் மத வழி பாட்டு முறைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆண் டாண்டு காலமாய் இந்துக்களும், இஸ்லாமியர்களும் ஒற்று மையாக திருப்பரங்குன்றத்தில் வாழ்ந்து வருகின்றனர், வழி பட்டு வருகின்றனர். பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியா முழுவதும்  இந்து முன்னணி போன்ற அமைப்புகள், சிறுபான்மை யினர் வாழ்கின்ற இடங்களில் மதத்தை வைத்து பிரச் சனை கிளப்புவதை தொடர்ந்து செய்து வருகின்றன. திருப்ப ரங்குன்றத்தில் ஆண்டுதோறும் தர்ஹா அருகே உள்ள தூணில் தீபமேற்ற வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்வார்  கள். இந்த ஆண்டு திருக்கார்த்திகைக்கு முன்பு இரவு  நேரத்தில் சென்று இந்து முன்னணியினர் திருட்டுத்தன மாக தீபத்தை ஏற்றினர். இஸ்லாமிய மத பண்டிகை நாட்களில் நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவார்கள். ஆனால் தொழுகை நடத்தக்கூடாது என்று இந்துத்துவ அமைப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். நீதி மன்றமோ தொழுகை செய்ய அனுமதி வழங்கியது. ஆனாலும், இந்து முன்னணி தொடர்ந்து சர்ச்சைக் குரிய வகையில் ஏதாவது ஒரு பிரச்சினையை கிளப்பிக் கொண்டே இருக்கிறது. அரசியல் லாபத்திற்காக திருப்ப ரங்குன்றத்தில் மத கலவரத்தை உருவாக்க திட்டமிடுகிறது. சில நாட்களுக்கு முன்பு கந்தூரி விழாவிற்காக ஒரு இஸ்லாமிய குடும்பத்தினர் ஆடு வெட்டி வழிபட வந்தனர். காவல்துறை ஆடு வெட்ட அனுமதிக்கவில்லை. பின்னர் இஸ்லாமிய அமைப்பினர் சில நூறு ஆண்டுகளாய் ஆடு  வெட்டி வழிபட்டு வருகிறோம் என்று கூறியும் காவல்துறை  அனுமதிக்கவில்லை. அதன் பிறகு இஸ்லாமிய அமைப்பி னர் ஆட்சியரிடம் சென்று மனு கொடுத்தனர். ஆர்ப்பாட்ட மும் நடத்தினர். ஆனால் அரசு ஆடு வெட்ட அனுமதிக்க வில்லை. இறுதியாக சில இஸ்லாமிய அமைப்புகளின் தூண்டுதலால் காவல்துறையை எதிர்த்து ‘ஆடு வெட்டு வோம்’ என்று இஸ்லாமியர்கள் திரண்டனர். காவல்துறை அவர்களை கைது செய்தது. பிரச்சனையின் முதல் நாளே, இந்து முன்னணி கல வர பதற்றத்தை ஏற்படுத்தும் வேலையில் இறங்கியது. இஸ்லா மியர்களுக்கு எதிராக வன்மத்தை விதைக்கும் பிரச்சா ரத்தை செய்தது. காவல்துறையை எதிர்த்து ஆடு வெட்டும்  போராட்டம் நடத்த இஸ்லாமிய மக்கள் அறிவித்த நாளில், இந்துத்துவ அமைப்புகள் மலையில் தீபமேற்றுவோம் என்று  ஆர்.எஸ்.எஸ், பாஜக கூட்டத்தைத் திரட்டி ஊர்வலம் சென்றனர். இது இந்துக்களின் கந்தர் மலையா, முஸ்லிம்களின் சிக்கந்தர் மலையா என்றும், ஆடு வெட்டினால் மலையின்  புனிதம் கெட்டுவிடும், ஆண்டாண்டு காலமாய் ஆடு வெட்டி னாலும் தற்போது ஏற்க முடியாது என்றும் திருப்பரங்குன் றத்தில் உள்ள மதவெறியைத் தூண்டும் நரி தந்திரத்தில் ஈடுபட்டனர். சில நூறு ஆண்டுகளாய் ஆடு வெட்டி வழிபடும் இஸ்லா மியர்களின் வழிபாட்டு உரிமையை இந்து அறநிலை யத்துறை தடுக்க காரணம் என்ன? அறநிலைத்துறை இஸ்லா மிய அமைப்புகளுக்கு இணங்கி செயல்படாத போதும் இந்துத்துவ அமைப்புகள் ஊர்வலம் செல்வது ஏன்? சட்டமன்றத் தேர்தல் 2026 நெருங்குவதால் நாட்டில் பல்வேறு இடங்களில் பா.ஜ.க மற்றும் இந்துத்துவ அமைப்பு கள் மதக் கலவரங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். இந்துக்களுக்கு இது கந்தர் மலை, இஸ்லாமியர்களுக்கு இது  சிக்கந்தர் மலை, ஆனால் திருப்பரங்குன்றம் அனைத்து மக்க ளுக்குமான மலை. பாஜக, இந்து அமைப்பினருக்கு ஆடு வெட்டுவதோ, இறைவன் தமிழ் கடவுள் முருகன் என்பதெல்லாம் எதுவும்  முக்கியமல்ல. எதை வைத்தாவது சிறுபான்மை முஸ்லிம்கள்  மீது வெறுப்பு அரசியலை உருவாக்கி பெரும்பான்மை இந்துக்களிடம் வன்மத்தை விதைப்பதே அவர்களின் நோக்கம். எந்த ஒரு இறைவனும் கலவரங்களை ஏற்ப தில்லை. மக்களுக்கான அன்பையும் அரவணைப்பையும் பெறவே உண்மையான இந்துக்கள், இஸ்லாமியர்கள் வழி பாடு நடத்துகிறார்கள். மலையைச் சுற்றி 100க்கும் மேற்பட்ட  கறிக்கடைகள் உள்ளன. வாரந்தோறும் 1000க்கும் மேற்பட்ட  ஆடுகள் பலியிடப்பட்டு இந்துக்களும் முஸ்லிம்களும் மன மகிழ்வுடன் கறி சமைத்து உண்கின்றனர். இதை அனைவரும் உணர வேண்டும். மக்களை பிளவுபடுத்தும் இந்துத்துவ அமைப்புகளை தனிமைப்படுத்த வேண்டும்.  திருப்பரங்குன்றம் மலை பாது காப்பாகவே உள்ளது. மக்கள் பாதுகாப்பை உறுதி செய்வ தும், அதற்கு மதவாத அரசியலுக்கு பொதுமக்களை இரை யாக விடாமல் காப்பதும்தான் முக்கியம். தமிழக அரசும், மதுரை மாவட்ட நிர்வாகமும், மக்களி டம் மீது பதற்றத்தை உருவாக்கும் அமைப்புகள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து கட்சிகளை உள்ள டக்கிய அமைதிக் குழு அமைத்து துல்லியமான ஆய்வை  நடத்த வேண்டும். மதவெறியர்களை தனிமைப்படுத்தி திருப்பரங்குன்றம் வாழ் மக்கள் அமைதியுடனும் மகிழ்ச்சி யுடனும் வாழ்வதை உறுதி செய்ய வேண்டும். பி.தமிழரசன் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர்,  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்