districts

img

மாற்றுத்திறனாளிகள் -மக்களிடம் மனுக்களைப் பெற்ற தேனி ஆட்சியர்

தேனி, டிச.5-  தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டிசம்பர் 5  திங்களன்று  மக்கள் குறை  தீர்க்கும் நாள் கூட்டம்,  மாவட்ட ஆட்சித்தலைவர்  க.வீ. முரளீதரன் தலைமையில் நடைபெற்றது.   இக்கூட்டத்தில் முதி யோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விவசாயக்கூலி உதவித்தொகை, மாற்றுத்  திறனாளிகள் உதவித்  தொகை, மாற்றுத்திறனாளி கள் அடையாள அட்டை, பட்டாகோருதல், பட்டா மாறு தல், கல்விக்கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல், மற்றும் காவல் துறை தொடர்பான மனுக்  கள் என பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் வழங்கினர் . பொதுமக்களிட மிருந்து 320 மனுக்கள் பெறப் பட்டன. தகுதி வாய்ந்த  மனுக்கள் மீது எந்தவித கால தாமதமின்றி உரிய விசா ரணை மேற்கொண்டு, நட வடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர்   துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், உங்கள் தொகுதியில் முத லமைச்சர் திட்டத்தின் மூலம்  பெறப்பட்ட மனுக்களின் நிலை, முதலமைச்சரின் தனிப் பிரிவின் மூலம் பெறப்பட்ட மனுக்களின் நிலை ஆகியன தொடர்பாகவும், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை கள் குறித்தும் மாவட்ட ஆட்சித்  தலைவர்  ஆய்வு மேற்கொண்டு,  உரிய நடவடிக்கைகள் மேற்  கொள்ள துறை அலுவலர் களுக்கு உத்தரவிட்டார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் தி. சுப்பிரமணியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின்  திட்ட இயக்குநர் இரா.தண்ட பாணி, தனித்துணை ஆட்சி யர் (ச.பா.தி) என்.சாந்தி மற்றும் அரசுத்துறை அலுவ லர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.