மதுரை, ஜூலை 24- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டக்குழு சார்பில் திங்களன்று செல்லூர் சோலை மஹா லில் நடைபெற்ற சிறப்பு பேரவையில் முதல் கட்டமாக 577 சந்தாக்களுக்கான தொகை ரூ.7 லட்சத்து 35 ஆயிரத்து 850 ரூபாயை மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஜா. நரசிம்மன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி. மல்லிகா, எஸ். வேல்தேவா ஆகியோர் தீக்கதிர் முதன்மை பொது மேலாளர் என்.பாண்டி, மதுரை பதிப்பு மேலாளர் ஜோ . ராஜ்மோகன் ஆகியோரிடம் வழங்கி னர். இதில் 5 ஆண்டு சந்தா ஒன்று, ஆண்டு சந்தா 215, 6 மாதம் சந்தா 244, மூன்று மாதம் சந்தா 50, மாதம் 67 சந்தாக்கள் என கட்சியின் பகுதிக்குழுக் கள் சார்பில் சந்தாக்கள் வழங்கப்பட்டன
இந்நிகழ்ச்சிக்கு மாவட்டக்குழு உறுப்பினரும் மாமன்ற உறுப்பினரு மான டி. குமரவேல் தலைமை வகித்தார். மத்தியக்குழு உறுப்பினர் பி. சம்பத் சிறப்புரையாற்றினார். மாநில செயற் குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாநிலக்குழு உறுப்பினர் இரா.விஜய ராஜன், மாவட்ட செயற்குழு மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.