பக்தர்களுக்கு இலவச பிரசாதம் வழங்கும் திட்டம்
அழகர்கோவிலில் தொடக்கம்
மதுரை, டிச.31- தமிழகத்தில், இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள திருக்கோவில்களில் தரிசனத்திற்கு வரும் பக் தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் (லட்டு) வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என இந்து சமய அறநிலை யத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்தார்.
இந்நிலையில், கோவில்களில் பிரசாதம் வழங்கும் திட்டத்தினை சென்னையில் காணொலி காட்சி மூலம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து, அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் திட்டத்தினை கோவில் செயல் அலுவலர் ராம சாமி தொடங்கி வைத்தார். மேலும் தரிசனம் முடித்து வரும் பக்தர்களுக்கு தடையின்றி நாள் முழுவதும் பிர சாதம் வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரி வித்துள்ளது. நிகழ்ச்சியில், கோவில் அலுவலர்கள், பணி யாளர்கள், மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
வைகை ஆற்றில் குளிக்க சென்ற இரு மாணவர்கள் சடலமாக மீட்பு
மதுரை, டிச.31- மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குரு வித்துறை ஊராட்சிக்குட்பட்ட சித்தாதிபுரம் கிராமம் வைகை ஆற்றுப்பகுதியில் உள்ள தடுப்பணையில் குளிக்க சென்ற இரண்டு மாணவர்களின் உடல் ஞாயிறன்று மீட்கப்பட்டது.
மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருபவர் யாதேஷ்தினகரன் (17). இவர் சனிக்கிழ மையன்று டியூசன் செல்வதாக கூறிவிட்டு, இவரது நண்ப ரான விளாங்குடி பகுதியைச் சேர்ந்த ஜாசன்ஆஸ்ட்ரிக் உடன் சித்தாதிபுரம் தடுப்பணையில் குளிக்க சென்றுள்ளனர்.
இந்நிலையில், இவர்கள் இருவரும் வீடு திரும்ப வில்லை. இதுகுறித்து காவல்துறையினரிடம் அளித்த புகாரின் பேரில், இவர்களின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்து பார்த்தபோது, குருவித்துறை சித்தாதி புரம் சிற்றணை பகுதியை காண்பித்தது. இதையடுத்து, அங்கு சென்று பார்த்த போது இருவரின் காலணிகள், பேக் உள்ளிட்டவை கிடந்தது.
இதைத்தொடர்ந்து சோழவந்தான் தீயணைப்பு துறை யினர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுப்பணித்துறைக்கு தகவல் கொடுத்து தண்ணீர் வரத்தை நிறுத்தினர். பின்னர் ஆற்றில் தேடுதலில் ஈடுபட்டபோது, மாயமான இரண்டு மாணவர்களின் சடலமும் மீட்கப்பட்டது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘சித்தாதி புரம் தடுப்பணை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதுகுறித்து காவல்துறை எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். முக்கியமாக பொதுமக்களை தடுப்பணை பகு திக்கு அனுமதிக்க கூடாது’’ எனக் கேட்டுக் கொண்ட னர்.
மினிப் பேருந்து மோதி பெண் காயம்
விருதுநகர், டிச.31- விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பு லட்சுமி (59). இவர் பழைய பேருந்து நிலையத்தில் நடந்து சென்ற போது, தனியார் மினி பேருந்து மோதியது.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது சுப்புலட்சுமியின் கால் அங்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் சக்கரத்தில் சிக்கியது.
இதையடுத்து, காயமடைந்த அவரை, அங்கிருந்த மக்கள் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து சுப்பு லட்சுமியனி மகள் குருலட்சுமி அளித்த புகாரின் பேரில் விருதுநகர் மேற்கு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த விளக்க பிரச்சாரம்
இராமநாதபுரம், டிச.31- இராமநாதபுரத்தில் பேருந்து நிலையம், அரண்மனைப் பகுதிகளில் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை விளக்கி, பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.
நிகழ்வில், பொதுமக்களுக்கு துண்டு பிரசுரத்தை வழங்கி சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.சிவாஜி துவக்கி வைத்தார். இராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் புற நகர் பணிமனை மத்திய சங்க நிர்வாகி பாஸ்கரன், தலை வர் செந்தில், செயலாளர் போஸ், பொருளாளர் ராம்குமார், ஓய்வு பெற்ற சங்க நிர்வாகிகள் ராஜாராம் பாண்டியன், சாத்தையா உட்பட 10-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர். அரண்மனை முன்பு நடைபெற்ற நிகழ்வில், நகர் கிளை தலைவர் ராஜாமணி, செயலாளர் துரைப்பாண்டி, பொருளாளர் பழனிச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
காலமானார்
மதுரை, டிச.31- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்ட மேற்கு ஒன்றியக் குழு உறுப்பினரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மேற்கு ஒன்றியத் தலைவருமான கே.முருகேசனின் தாயார் கே.காளியம்மாள் (80) சனிக்கிழ மையன்று இரவு காலமானார்.
அன்னாரது மறைவு செய்தியறிந்து கட்சியின் மூத்த தலைவர் சி.ராமகிருஷ்ணன், மாநிலக் குழு உறுப்பி னர் எஸ்.பாலா, ஒன்றியச் செயலாளர் பி.ஜீவானந்தம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.பி.இளங்கோ வன், வி.உமாமகேஸ்வரன், மேற்கு மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.பாலகிருஷ்ணன், சி.மலர்விழி, விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஏ.வேல்பாண்டி, தென்னை விவசாயம் சங்க மாநிலப் பொருளாளர் பி.நாகேந்திரன் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.
இரு சக்கர வாகனத்தில் சென்றவர் கீழே விழுந்து பலி
விருதுநகர், டிச.31- மதுரை மாவட்டம் ஹார்விபட்டியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (64). இவர் தனது இரு சக்கர வாக னத்தில் திருத்தங்கல்லில் உள்ள உறவினரைப் பார்க்க புறப்பட்டுள்ளார். விருதுநகர் அருகே உள்ள தனியார் உணவகம் அருகே வந்த போது, தலைசுற்றி தானாக கீழே விழுந்தார்.
இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் மீட்டு அவரை விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்த்த னர். பின்பு, மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி கோவிந்தராஜ் உயிரிழந்தார்.