மதுரை, ஜூலை 18- மதுரை தீக்கதிர் கண்ணன் டிபார்ட் மெண்ட் ஸ்டோர் இறக் கத்தில் ஜூலை 15 அன்று காலை 8 மணியள வில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் மயங்கிய நிலை யில் இருந்தார். அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்த னர். அவரது ஆதார் கார்டு மூலம் அப்பெண் ணின் பெயர் செல்வி. வயது 37 என தெரியவந்தது. சுயநினைவின்றி தொடர் சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் ஜூலை 17 அன்று அதிகாலை 1.30 மணிக்கு இறந்துவிட்டதாக விளாங்குடி-1பிட் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவரது உடல், உறவினர்களை கண்டறிவதற்காக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இவ்விபரத்தை டி-2 செல்லூர் காவல் ஆய்வாளர் செய்திக்குறிப்பு மூலம் தெரி வித்துள்ளார்.