திருநெல்வேலி, மே 8- நெல்லை மாவட்டத்தில் 3-வது சிறப்பு தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற் றது. மாநகராட்சி பகுதியில் மட்டும் 266 சிறப்பு முகாம்கள் மற்றும் 18 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு 700 பணியாளர் கள் ஈடுபட்டனர் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் நடந்த முகாமை மாநகராட்சி மேயர் சரவணன் தொடங்கி வைத்தார். முகாமில் தகுதியுள்ள ஏராளமான பயணி கள் தடுப்பூசி செலுத்தி கொண்ட னர். நிகழ்ச்சியில் துணை மேயர் கே.ஆர். ராஜூ, நகர்நல அலுவலர் டாக்டர் ராஜேந்திரன், சுகாதார ஆய்வாளர் பெருமாள், உதவி செயற்பொறியாளர் லெனின் உள் ளிட்டவர்கள் கலந்து கொண்ட னர். இதேபோல் 9 நகர்ப்புற சுகா தார மையங்கள், கலெக்டர் அலு வலகம், வண்ணார் பேட்டை ரவுண் டானா, பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் பொதுமக்க ளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வரு கிறது. மேலும் வீடு, வீடாக சென்று 2-வது தவணை விடுபட்டவர் களுக்கும், பூஸ்டருக்கு தகுதி யானவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதுதவிர 9 யூனியன் பகுதி களில் 1,734 முகாம்கள், 119 நட மாடும் குழுக்கள் என 1,853 முகாம்கள் மூலம் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. ஒட்டு மொத்தமாக ஞாயிறன்று நெல்லை மாவட்டத்தில் 2,137 சிறப்பு முகாம் களில் தடுப்பூசி செலுத்தப்பட் டது. நெல்லை மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளிலும் தலா 3 குழுக்கள் விகிதம் சென்று தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர். தென்காசி மாவட்டத் தில் தென்காசி, கடையநல்லூர், ஆலங்குளம், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் ஆகிய 5 சட்ட மன்ற தொகுதிகளுக்குட்பட்ட கிராம பஞ்சாயத்து பகுதிகள், பேரூராட்சி பகுதிகள், நக ராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சிறப்பு முகாம்கள் அமைக்கப் பட்டு தடுப்பூசிகள் செலுத்தப் பட்டது. ஞாயிற்றுக்கிழமை முகாமை பயன்படுத்தி 2-வது தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசி போடாதவர்கள் தடுப்பூசிகள் செலுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டி ருந்தது. அதன்படி ஞாயிற்றுக் கிழமை அதிகாலை முதலே பல முகாம்களில் பொதுமக்கள் தாமாக வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.