திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில் சாக்கடைப் பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும். கழிவு நீரோடைகளுக்கு நிதி ஒதுக்கி சாக்கடைகள் கட்ட வேண்டும். கடைவீதி சாலையை விரிவுபடுத்த வேண்டுமென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.செல்வராஜ், ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜரத்தினம், கிளைச்செயலாளர் தம்பிமுத்து மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.