districts

img

தூய்மைக் காவலரைச் சாதிய வன்மத்துடன் பேசிய ஊராட்சித் தலைவர்

மதுரை, ஆக.21-  தூய்மைக் காவலரைச் சாதி யைச் சொல்லித் திட்டி அராஜக மான முறையில் நடந்து கொண்ட ஊராட்சி மன்றத் தலைவர் மீது நட வடிக்கை எடுக்க வலியுறுத்தி தூய்மை காவலர் மாவட்ட ஆட்சி யர், வருவாய்த் துறை அதிகாரி கூடுதல் ஆட்சியரிடம் மனு அளித்தார். மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகா எஸ் வெள்ளாகுளம் ஊராட்சி கீழத்தெருவை சேர்ந்த வர் என்.செல்வி. இவர் வெள்ளா குளம் ஊராட்சியில் தூய்மைக் காவ லராகக் கடந்த எட்டாண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். இவரது மகன் தீபக் (14) சிந்துபட்டியில் உள்ள அம்மாபட்டி அரசு மேல் நிலைப் பள்ளியில் 9 -ஆம் வகுப்பு  படித்து வருகிறார். திருமுருகன் சுதந்திரதின விழாவையொட்டி பள்ளியில் நடைபெறும் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது அங்கு நடக்கும் நிகழ்வுகளை யாரும் கைப்பேசியில் காணொளி மற்றும்  புகைப்படம் எடுக்கக் கூடாது என்று  பள்ளி ஆசிரியர் நடராஜன் கூறி யுள்ளார் யாராவது எடுத்தால் புகார் தெரிவிக்க வேண்டும் என்று  கூறியுள்ளார். அந்த அடிப்படை யில் எஸ். வெள்ளாங்குளத்தை சேர்ந்த கருப்பசாமி என்ற இளை ஞர் நிகழ்வுகளை கைப்பேசியில் காணொளி எடுத்துள்ளார். இதை ஆசிரியரிடம் திருமுருகன் கூறி யுள்ளார். இதையடுத்து கருப்பசாமியின் தந்தை சோனை முருகன் திருமுரு கன் வீட்டிற்குச் சென்று சாதியின்  பெயரைச் சொல்லித் தாக்கியுள் ளார். இதைத் தடுக்கச் சென்ற மகன்  தீபக்கைக் கம்பியால் தலையில் அடித்துக் காயப்படுத்தி உள்ளார். இந்தத் தகவல் கிராம சபைக் கூட்டத்திலிருந்த செல்விக்குத் தெரிவிக்கப்பட்டது. வீட்டிற்குச் சென்ற அவர் ரத்தக் காயத்துடன் இருந்த தீபக்கைக் கிராம சபைக் கூட்டத்திற்கு இடத்திற்கு வந்து நடைபெற்ற சம்பவத்தை ஊராட்சி மன்றத் தலைவர் ஆறுமுகத்திடம் கூறியுள்ளார்.  பின்னர் செல்வி. தன்னுடைய மகனை காரியாபட்டி அரசு மருத் துவமனையில் அனுமதித்து இரண்டு நாள் சிகிச்சை அளித்துள்  ளார். இதனால் அவர் இரண்டு நாட்  கள் பணிக்குச் செல்லவில்லை.  மீண்டும் பணிக்குச் சென்ற  செல்வியை ஊராட்சி செயலர்  காமாட்சி இரண்டு நாள் சொல்லா மல் விடுப்பு எடுத்ததாலும் ஊராட்சி மன்றத் தலைவர் ஆறுமுகத்தின் உறவினர் கருப்பசாமி என்று தெரிந்  தும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளாய், உனக்கு வேலை கொடுக்கக் கூடாது என்று கூறி யுள்ளார். இதையடுத்து செல்வி ஊராட்சித் தலைவரைச் சந்தித்துப்  பேசியுள்ளார். அப்போது அவர்,  உன்னை வேலைக்கு எடுக்க முடி யாது. வேலை வேண்டுமானால் காவல் நிலையத்தில் கொடுத்த புகா ரைத் திரும்பப் பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.  இதையடுத்து செல்வி, தீண் டாமை ஒழிப்பு முன்னணி புறநகர் மாவட்டத் தலைவர் செ.ஆஞ்சி, மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் பொன். கிருஷ்ணன், சிஐடியு மாவட்ட குழு உறுப்பினர்கள் எம்.  ஆண்டவர் சேதுராமு ஆகியோரு டன் திங்களன்று ஆட்சியர், கூடு தல் ஆட்சியரைச் சந்தித்துப் புகார்  அளித்துள்ளார்.