districts

img

மாநகராட்சி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

மதுரை, அக்.12-  மாநகராட்சி பணிகளை தனி யார்மயமாக்கும் அரசாணை -  152-ஐ ரத்து செய்திட வேண்டும்,  தினக்கூலி தூய்மை பணியாளர் கள், ஓட்டுநர்களை நிரந்தரம் செய்திட உயர்நீதிமன்றம் பிறப் பித்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து மதுரை மாநகராட்சி தொழி லாளர் சங்கம் (சிஐடியு) சார்பில்  மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் வியாழ னன்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் எம்.மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார். மாவட்ட  பொதுச் செயலாளர் ம.பாலசுப்பிர மணியம், மாவட்டப் பொருளாளர் கருப்பசாமி, துணைத் தலைவர்கள் சீதாலட்சுமி, ரவி, முருகன், நாச்சி யப்பன், காளியப்பன், செயலா ளர்கள் சரவணன், வைரமணி, மூர்த்தி பெண்கள் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.