மதுரை, மார்ச் 10- மதுரை மாநகராட்சி வார்டு எண்.29 செல்லூரில் உள்ள மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் தனிநபர் முழுபங்களிப்புடன் ரூ.71.45 லட்சம் மதிப் பீட்டில் கூடுதலாக கட்டப்பட உள்ள பள்ளி வகுப்பறை கட்டி டப்பணியை மேயர் வ. இந்திராணி துவக்கி வைத்தார். பள்ளியில் புதிதாக கட்டப்படும் கட்டிடத்தில் தரைதளம் மற்றும் முதல்தளத்தில் நான்கு பள்ளி வகுப்பறைகள், மாணவ, மாணவிகளுக்கு தனித்தனி கழிப்பறைகள், உணவு அருந்தும் அறை, பள்ளியை சுற்றி பேவர் பிளாக் தரைத்தளம் மற்றும் ஆழ்துளை கிணறு வசதிகளும் அமைக்கப்பட உள்ளது. இப்பள்ளிக்கு நிதி வழங்கிய தனிநபர் பங்களிப்பாளர் ஏற்கனவே மாந கராட்சி திரு.வி.க மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் கட்டி டம் கட்டுவதற்கு ரூ.1.10 கோடி நிதி வழங்கியுள்ளார். தொடர்ந்து வார்டு எண்.43 ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் தெரு, இஸ்மாயில் புரம் 12வது தெரு, சுடலை முத்துப்பிள்ளை சந்து, காதர்கான் பட்லர் தெரு, கொண்டித் தொழுத் மெயின் தெரு மற்றும் கொண்டி தொழு வடக்கு தெரு உள்ளிட்ட ஏழு தெருக்களில் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக தார்ச்சாலை அமைக்கும் பணியினை மேயர் நேரில் ஆய்வு மேற் கொண்டார். 28 ஆவது வார்டு பகுதிகளிலும் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்வது குறித்து ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது துணை மேயர் தி.நாகராஜன், துணை ஆணையாளர் முஜிபூர் ரகுமான், மண்டலத் தலைவர் முகேஷ்சர்மா, கல்விக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், நகரப்பொறியாளர் அரசு, உதவி ஆணையாளர்கள் திருமலை, வரலெட்சுமி, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.