தென்காசி, பிப்.19- தென்காசி மாவட்டம், கடையநல்லூர் தாலூகா சாம்பவார் வடகரையில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் 8 குடும்பங்களை நாட்டாமை வெங்கடேஷ், மற்றும் ஆதிக்க சக்திகள் ஊர் விலக் கம் செய்துள்ளனர். இதில் 8 குடும்பங்கள் தங்களை ஊரில் சேர்க்கக்கோரி கடந்த 8 மாதமாக அரசு அதி காரிகளிடம் மனு கொடுத்து வந்தனர். இதில் எந்த பலனு மில்லை.இதனால் 11.02.25 அன்று சிபிம் சார்பில் காத்தி ருப்பு போராட்டம் என அறிவித்தனர். இதனை ஓட்டி 10-02-25 அன்று கோ ட்டாச்சியர் அலுவலகத்தில் சமாதானக் கூட்டம் நடை பெற்றது. இந்த கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப் படவில்லை. மேலும் ஊர் தரப்பில் கலந்து பேசி வரு கிறோம் என்று கூறினர். பின்பு 14.02.25 அன்று சமாதான கூட்டம் நடைபெறும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப் பட்டது. ஆனால் 14.2.25 அன்றய கூட்டத்திற்கு அதிகாரிகள் வரவில்லை. இதனால் 8 குடும்பங்க ளைத் தனிமைப்படுத்தி கொடுமை செய்துவரும் ஊர் நாட்டாமை உள்ளிட்ட சாதி ஆதிக்க சக்திகள் மீது நடவ டிக்கை எடுக்ககோரி பல் வேறு வழிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர், காவல் துறை அதிகாரிகள் உள் ளிட்டோரிடம் பலமுறை முறையிட்டும் எந்த பலனும் ஏற்படாத நிலையில் வேறு வழியின்றி பாதிக்கப்பட்ட வர்கள் பெண்கள் குழந்தை களுடன் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் பட்டாபிராமன், தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். இதில் மாவட்டக் குழு உறுப்பினர் லெனின் குமார், வட்டாரக்குழு உறுப்பினர் அய்யப்பன், ஆய்க்குடி கிளை செயலா ளர் ஆறுமுகம், அருணாச்ச லம் மற்றும் பலர் பங்கேற்ற னர். 30 க்கும் மேற்பட்டோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். மாவட்டச் செயலாளர் உச்சிமாகாளி கைது செய்யப்பட்டவர் களை மண்டபத்தில் சந்தித்து பேசினார்.