districts

img

கொட்டகுடி ஆதிதிராவிட மக்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கல்

சிவகங்கை,பிப்.11-   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 10 ஆண்டுகால தொடர் போராட் டத்தால் கொட்டகுடி ஆதிதிராவிட மக்க ளுக்கு வீட்டுமனைப்பட்டா கிடைத்தது. சிவகங்கை மாவட்டம், கொட்டகுடி கிராமத்தில் ஆதிதிராவிட மக்கள் வசித்து வருகின்றனர். ஏழை கூலித் தொழிலாளர்களான இவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த  10 ஆண்டுகளாக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் விஸ்வநா தன் முயற்சியில்  21 ஆதிதிராவிடர் குடும்பங்களுக்கு ஆதிதிராவிட நல அலுவலர் உமா மகேஸ்வரி வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார். இதன்பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்திற்கு வந்த ஆதிதிராவிட மக்கள் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ச.மோ கன், மாவட்டக்குழு உறுப்பினர் விஸ்வம்,பொறியாளர் பால சுப்பிரமணியன்ஆகியோரிடம் பட்டாக் களை காண்பித்து நன்றியை தெரி வித்தனர்.