districts

சென்னை உயர்நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் குழுவை அமைத்து, அனுமதிக்க வேண்டும்

மதுரை, ஆக.8-  மணிப்பூர் கலவரத்தால் உடல் ரீதியாக  மன ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்களை சந்தித்து உளவியல் மற்றும் மறு வாழ்வு  அளிக்கும் வகையில் சென்னை உயர்நீதி மன்றத்தைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் கள் குழுவை அமைத்து, அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை  உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர்  சீனி சையத் அம்மா, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மனு அனுப்பி உள்ளார் அவர் அனுப்பிய மனுவில், மணிப்பூர் மாநிலத்தில் நடந்த கலவரத்தில் பாதிக் கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் எந்த மனித கண்ணியமும் இல்லாமல் நடத்தப்பட்டனர் .பாதிக்கப்பட்ட பெண்கள்  தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவும்  காணொலிகள் பெண்கள் மட்டுமின்றி அனைத்து நாகரீக மனிதர்களின் ரத்தத்தை  உறைய வைக்கிறது. பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து மன உளைச்ச லுக்கு ஆளாகி உள்ளனர்.உதாரணமாக சிலர் வேலையில் தொடர முடியாத அள வுக்கு மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.  எனவே, பாதிக்கப்பட்ட பெண்களை  அவர்கள் அனுபவித்த மனவேதனையிலி ருந்து வெளிவர உதவுவதற்காக, சென்னை  உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த பெண் வழக்க றிஞர்கள் குழுவை அமைத்து அவர்களைச்  சந்திக்க அனுமதிக்க வேண்டும். மணிப்பூர் பெண்களுக்கு ஏற்பட்ட உடல்  ரீதியாக, மன ரீதியாக ஏற்பட்ட காயங்கள்  மற்றும் காயங்களை குணப்படுத்த வேண் டும். பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் ரூ.25 லட்சம் இழப்பீடாக வழங்க வேண் டும். உடனடி இலவச சட்ட உதவிகளை வழங்க வேண்டும்.  இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 32 வது பிரிவின் கீழ் இதை ஒரு ரிட் மனு வாகக் கருதி விசாரிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.