districts

img

கட்சித் தலைவரை வரவேற்று பதாகை வைத்த அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாகம்

விருதுநகர், செப்.6- விருதுநகர் மாவட்டம் இராஜபாளை யத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி  நிர்வாகத்தினர் பாஜக மாநிலத் தலைவர்  அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்  வதை வரவேற்று பதாகை வைத்துள்ளனர். எனவே, அப்பள்ளி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாஜக மாநிலத் தலைவர் அண்ணா மலை தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டு பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று வருகிறார். இந்நிலையில், செப்டம்பர் 5 அன்று தென்காசி மாவட்டத்தில் நடைபயணத்தை முடித்து விட்டு இராஜபாளையத்திற்கு வந்  துள்ளார். செப்.6 அன்று பெரிய மாரியம்மன்  கோவில் பகுதியிலிருந்து தனது யாத்திரை யை துவக்கி பஞ்சு மார்க்கெட்டில் நிறைவு  செய்வதாக பாஜக தரப்பில் தெரிவித்த னர். இந்தநிலையில், பாஜக தலைவர் அண்ணாமலையை வரவேற்று இராஜ பாளையம் ந.அ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப் பள்ளி சார்பில் பதாகை வைக்கப்பட்டிருந்தது. இது அரசு உதவி பெறும் பள்ளியாகும். தமிழ்நாடு அரசின் உதவியைப் பெற்று  இயங்கி வரும் இப்பள்ளி நிர்வாகமானது, எப்படி, சமூக நீதிக்கு எதிராக, சனாத னத்தை உயர்த்திப் பிடித்து வரும் கொள்கை யை அடிப்படையாக கொண்ட பாஜக மாநி லத் தலைவரை வரவேற்று பதாகை வைக்க லாம் என பொதுமக்கள் கேள்வி எழுப்பி யுள்ளனர். இதையடுத்து, அந்த பதாகையின் புகைப்படத்தை எடுத்து பலர் தங்களது முக நூல், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊட கங்களில் பதிவிட்டனர். இதனால் ஏராளமா னோர் அப்பள்ளி நிர்வாகத்தின் மோசமான

 இச்செயலை கண்டித்து  பலர் அதில் தொடர்ந்து பதிவிட்டனர். அதன் பிறகு, காவல்துறையினருக்கும், வருவாய்த்துறையினருக்கும் புகார்கள் செய்யப்பட்டன. பின்பு, பள்ளி நிர்வாகத்தை  அரசு தரப்பில் எச்சரித்த பின்பு, அந்த பதா கையை பள்ளி நிர்வாகம் அகற்றியுள்ளது. ஆனால், அதை பள்ளியில் படித்து வரும்  மாணவ, மாணவிகள் பார்க்கும் வகையில்  பள்ளி வளாகத்தின் முன் பகுதியில் வைத் துக் கொண்டு தங்களது நப்பாசையை தீர்த்துக் கொண்டனர். இதே பள்ளியில் கடந்த காலங்களில்,  மதவெறி பிடித்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பின்  சாகா நிகழ்ச்சியை நடத்துவதற்கு பள்ளி நிர்வாகத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர். அப்போதும் பொதுமக்கள் மத்தியில்  பெரும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், அப்  போதையை மாவட்ட நிர்வாகம் உரிய நட வடிக்கை எடுக்கவில்லையென கூறப்படு கிறது. எனவே, தமிழக அரசும், விருதுநகர் மாவட்ட நிர்வாகமும், அரசு உதவி பெறும் பள்ளியான ந.அ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளி நிர்வாகத்தினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.