districts

img

விளைநிலங்களைச் சேதப்படுத்தும் கிராவல் மண் லாரிகளை சிறை பிடித்த பொது மக்கள்

உடுமலை, ஜன.28- உடுமலையில்,வாகனங்கள் செல்லும் போது ஏற்படும் தூசியால்  விளைநிலங்களில் உள்ள பயிர்கள்  அனைத்தும் பாதிக்கப்படுகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க  வேண்டி, கிராவல் மண் ஏற்றி வந்த கனரக வாகனங்களை பொது  மக்கள் சிறை பிடித்து போராட் டத்தில் ஈடுபட்டனர். உடுமலை தாலுக்கா, சின்னவீரம் பட்டி இருந்து நான்கு வழிச் சாலைக ளுக்கு கிராவல் மண் கனரக வாக னங்கள் மூலம் எடுத்துச் செல்வ தால் அப்பகுதியில் இருக்கும் அனைத்து இணைப்பு சாலைகளும்  பாதிக்கப்படுகின்றன. வாகனங்கள்  செல்லும் போது ஏற்படும் தூசியால்  விளைநிலங்களில் உள்ள பயிர்கள்  அனைத்தும் பாதிக்கப்படுகின்றன. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டி பொது மக்கள் கிராவல் மண் ஏற்றிவந்த கனரக வாகனங்களை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து பொது மக்களிடம் கேட்ட போது, பொள்ளாச்சி முதல் திண்டுக்கல் வரை நான்கு வழி சாலைகள் அமைக்க கிராமப் பகுதி யிலிருந்து நூற்றுக்கணக்கான கன ரக வாகனங்கள் மூலம் அருகில் உள்ள குளம் மற்றும் குட்டைகளில் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் மண் அள்ளப்பட்டு வருகிறது.

இங்கு  எடுக்கப்படும் மண்னை கிராமப்புற இணைப்பு சாலை வழியாகச் செல் வதால் அனைத்து சாலைகளும்  மண் மேடாக உள்ளன. மேலும் வாக னங்கள் செல்லும் போது ஏற்படும் தூசிகள் விளை நிலங்களில் உள்ள  பயிர்களில் படிவதால் அனைத்து பயிர்களும் காயும் நிலையில் உள் ளன. இதே போல் கடந்த சில மாதங் களுக்கு முன்பு வாகனங்களைச் சிறை பிடித்து போராட்டம் நடத்திய  போது வருவாய் மற்றும் காவல்து றையினர் முன்னிலையில் தினமும் மூன்று வேளையும் சாலைகளில் தூசி  பரவாமல் தடுக்கும் வகையில் தண் ணீர் ஊற்ற நடவடிக்கை எடுக்கப்ப டும் என்றார்கள். ஆனால் சில நாட்கள்  மட்டுமே தண்ணீர் விடப்பட்டது. கடந்த சில வாரங்களாகச் சாலை களில் தண்ணீர் விடாமல் வாகனங் கள் செல்வதால் தூசி பரவுகிறது என்று பல முறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், எவ்வித நட வடிக்கை எடுக்காத காரணத்தால் வாகனங்களைச் சிறை பிடித்து போராட்டம் நடத்துகிறோம் என்றார் கள்.