விருதுநகர், ஆக.13- விருதுநகர் மாவட்டம் அச்சம்தவிழ்த்தான் கிரா மத்தில் அதிகளவு மரக்கன்று கள் நடும் பணியினை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் துவக்கி வைத்தார். பின்பு, தேய்வேந்தரி கிரா மத்தில் 5 ஏக்கர் பரப்பளவில் சுமார் 1000 மகோகனி மரக் கன்றுகள் நடப்பட்டு, பராம ரிக்கப்பட்டு வருவதை ஆய்வு செய்தார். பின்னர், விவசாயி களுக்கு பாரம்பரிய நெல் ரகங்களை 50 சதவிகித மானி யத்திலும், துவரை விதை கள் மற்றும் மானிய விலை யில் உளுந்து விதைகளை யும் வழங்கினார். அதனைத் தொடர்ந்து, வன்னியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்தில் கர்ப்பிணி தாய்மார் களிடம் அடிப்படை வசதி உள்ளிட்டவை குறித்து கேட் டறிந்தார். மேலும், திருவில்லி புத்தூரில் வேளாண்மை விரி வாக்க மையத்தில் உரம், பூச்சிக்கொல்லி மற்றும் இடு பொருட்கள் கண்காட்சி யினை பார்வையிட்டார். இந்த நிகழ்வுகளின் போது, நேர்முக உதவியா ளர் (விவசாயம்) நாச்சி யார் அம்மாள், சுகாதார அலு வலர் (பொ) யசோதாமணி உட்பட அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.