districts

img

தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் முடிவு

மதுரை, ஜூன் 12-  திடீரென பணிநீக்கம் செய்து  136 தொகுப்பூதிய ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பறித்துள்ளது மதுரை காமராசர் பல்கலைக்கழக நிர்வாகம். மீண்டும் பணி வழங் கக்கோரி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். மதுரை காமராசர் பல்க லைக்கழகத்தில் தொகுப்பூதியத் தில் பணியாற்றிய துப்புரவுப்பணி யாளர், ஓட்டுநர், கணினி மென் பொருள் பராமரிப்பாளர், இள நிலை உதவியாளர், தோட்டம் பராமரிப்பவர் உட்பட 136 பேரை  திடீரென வாய்மொழி உத்தரவின்  பேரில் கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி  பணிநீக்கம் செய்தனர். ஒரு உத்தர வால் இவர்களது வாழ்வாதாரமே கேள்விக்குறியானது.இதனால்  அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், மீண்டும் பணி வழங்குமாறு கோரி க்கை முன்வைத்தனர். ஆனால் நடவடிக்கை இல்லாததால் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்ற னர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களிடம் கேட்டபோது அவர்  கள் கூறுகையில், பத்து ஆண்டு களுக்கும் மேலாக பல்கலைக்கழ கத்தின் வளர்ச்சியில் பணி நீக்கம்  செய்யப்பட்ட 136 ஊழியர்களுக் கும் ஒரு முக்கிய பங்கு உள்ளது  என்று கண்ணீர் மல்க தெரிவிக்கின்  றனர்.

இவர்கள் அனைவருக்கும் ஒரு மாதத்தில் 20 நாட்கள் மட்டுமே பணி செய்வதற்கான ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. உதாரண மாக ஒரு நபருக்கு அவருடைய வேலையைப் பொறுத்து ஊதியம்.  இந்த ஊழியர்களில் அதிகபட்ச ஊதியமே ரூ.10 ஆயிரம் மட்டுமே. இந்த 20 நாட்களில் முக்கிய வேலை  காரணமாகவோ அல்லது உடல்  நிலை சரியில்லை என்று விடுமுறை  எடுத்தால் அந்த நாளுக்கான சம்ப ளம் கிடையாது. அதே நேரத்தில் இருபது நாட்களுக்கு மேல் எத்தனை நாள் பணியாற்றினாலும் அதற்கும் ஊதியம் கிடையாது. இப்படித்தான் கடந்த 10 ஆண்டு களாக வேலை பார்த்து வந்தனர். குறைந்தபட்ச ஊதியம் ரூ.6 ஆயி ரம் முதல் 7 ஆயிரம் வரை வாங்கு பவர்களும் உள்ளனர். 

மனஉளைச்சலில் ஊழியர்கள்'

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மேலும் கூறுகையில், பல்கலைக்  கழகத்தின் உள்ளே வேலை பார்க்  கும் ஆசிரியர், ஆசிரியரல்லாதோர் மற்றும் ஓய்வு பெற்றோர் உட்பட அனைவருக்கும் ஒரு மாதச் சம்ப ளம் பத்தரை கோடி ரூபாய் வரு கிறது. ஆனால் 136 பணியாளர் களுக்கு ரூ.10 லட்சத்திற்கும் கீழ் தான் வருகிறது. ஆனால் எங் களை கூடுதல் ஊழியர்கள் என்று கூறி வெளியேற்றி விட்டார்கள். பல்க லைக்கழகத்தில் 903 பணியிடங்க ளில் 870-க்கும் மேற்பட்டோர் பணி யில் இருந்தோம். இன்னும் காலிப்  பணியிடங்கள் உள்ளன. ஆனால்  136 பேர் கூடுதல் ஊழியர்கள் என்று கூறி பணி நீக்கம் செய்துள்ளனர். இந்த போராட்டத்தில் 3 மாற்றுத் திறனாளிகள், கணவனால் கை விடப்பட்டவர்கள் 2 நபர்கள், வித வைப் பெண்கள் 2 பேர் உள்ளனர்.  136 பேரில் துப்புரவு பணியாளர்கள் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு  படித்துள்ளனர். மற்ற பல ஊழியர்  கள் பட்டதாரிகள். பிஹெச்டி படித்த வர்கள் 2 பேர் உள்ளனர். இதில்  குறிப்பாக ராமு என்பவர் இன்ஜினி யர் பிரிவில் சமையல் உதவியாள ராக இருந்தவர். பணி நீக்கத்தால் அவருக்கு மன உளைச்சல் ஏற்  பட்டு 30 நாட்களுக்கும் மேலாக சாப்பிடாமல் இருந்தார். இதனால்  அவர் உடல்நிலை திட உணவு களை ஏற்க மறுத்துவிட்டது. தற்  போது திரவ உணவை அவர்  உட்கொள்கிறார். மருத்துவமனை யில் சிகிச்சை எடுத்து தற்போது  அவரது இல்லத்தில் ஓய்வில் உள் ளார். மற்றொரு மாற்றுத்திறனாளி ஆனந்த் என்பவர் போராட்டத்தில் ஈடுபட்ட போது மன உளைச்சல்  ஏற்பட்டு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். காவல்துறையினரும் சக ஊழியர்  களும் தடுத்து நிறுத்தினர். முதல்  பத்து நாட்கள் உள்ளிருப்பு போராட்டத்தில்தான் ஈடுபட்டிருந்  தோம். ஆனால் பல்கலைக்கழக  நிர்வாகம் இரவில் காவல்துறை யை வைத்து தரக்குறைவாக பேசி குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றி னர். காவல்துறை மற்றும் நிர்வா கத்தின் அராஜகப் போக்கு இருந்  தன என்று பெண்கள் மனம்நொந்து கூறினர். 

முதல்வர் தலையிட வலியுறுத்தல்

பல்கலைக்கழக துணைவேந்த ரிடம் இவர்கள் கேட்டபோது, முன்னாள் பதிவாளர் மற்றும் சிண்டி கேட் 136 பேரை பணி நீக்கம் செய்யக்கோரி ஆர்டரை ரெடியாக வைத்திருந்தார்கள். நான் வந்த வுடன் கையெழுத்திட்டேன் என்று துணைவேந்தனர் சாதாரணமாக கூறுகிறார். துணைவேந்தர் பணி யில் அமர்ந்து ஐந்தாவது நாளில் 136 பேரின் வேலைத் தன்மை  குறித்து என்ன அறிந்துகொண்டார். இத்தனை நாட்கள் போராட்டம்  நடத்தியும், துணைவேந்தரும் வேந் தரும் அரசும் மனமிரங்கவில்லை. முதலமைச்சர், துணைவேந்தர் ஆகியோர் எங்களின் வாழ்வாதா ரத்தை கருத்தில் கொண்டு மீண்டும் பணியில் அமர்த்தும் வரை தொடர்ந்து போராடுவோம் என்று கண்ணீருடன் தெரிவிக்கின்றனர்.  ஜூன் 14 தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கத்தின் தலைவர்கள் முன்னி லையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடைபெறுகிறது. அதற்கும் செவிசாய்க்கவில்லை என்றால் ஜூன் மாத கடைசி வாரத்  தில் தொடர் உண்ணாவிரதப் போராட்  டத்தில் ஈடுபடுவோம் என்று உறுதி யாக தெரிவித்துள்ளனர். (ந.நி.)