மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சக்கிமங்கலம் ஊராட்சியில் அக்டோபர் 28 நடைபெற்ற விழாவில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்பி.மூர்த்தி பல்வேறு அரசுத்துறைகளின் சார்பாக 1,432 பயனாளிகளுக்கு ரூபாய் 5 கோடியே 66 இலட்சத்து 11 ஆயிரத்து 660 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வுகளின் போது, மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.எஸ். அனீஷ் சேகர்,கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்சி.குருமூர்த்தி அவர்கள், மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ரா.மணிமேகலை அவர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.