districts

img

பள்ளி மாணவரை உச்சி வெயிலில் முட்டிபோட வைத்த கொடுமை

நத்தம், மார்ச் 15-  திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறை யில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு காலையில் நடைபெற்றது. இதனால் மற்ற  வகுப்பு மாணவர்கள் மதியம் பள்ளிக்கு வர அறிவுறுத்தி யிருந்தனர்.  இதில் 10 ஆம் வகுப்பு மாணவர்களில் ஒருவர் பள்ளிக்கு  காலதாமதமாக வந்ததாக தெரிகிறது. இதனால் ஆசிரியர்  ரகுநாத் அந்த மாணவரை அழைத்து திட்டியுள்ளார். மேலும் பள்ளியில் மதியம் கடுமையான உச்சி வெயி லில் இரக்கம் இல்லாமல் மைதானத்தில் முட்டி போட்டுக்  கொண்டே படிக்க வைத்துள்ளார். நிலத்தின் சூடு தாங்க  முடியாமல் அந்த மாணவர் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.   இதை அங்குள்ள சிலர் படம் பிடித்து சமூக வலைதளங்க ளில் வெளியிட்டுள்ளனர்.  மாணவரை கொடுமைப்படுத்திய ஆசிரியர் மீது பள்ளிக்கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலி யுறுத்தியுள்ளர்.