பழனி மலை கோவிலில் சட்டமன்றக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இதில், குழுவின் தலைவர் முனைவர் கோவி.செழியன், உறுப்பினர்கள் கோ.ஐயப்பன், ப.கார்த்திகேயன், மு.பாபு, கே.பொன்னுசாமி, வை.முத்துராஜா மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செயலாளர் கி.சீனிவாசன், திண்டுக்கல் ஆட்சியர் மொ.நா.பூங்கொடி ஆகியோர் வருகை தந்தனர். அப்போது, சாலையோர வியாபாரிகள் சார்பில் ஆய்வுக் குழு தலைவர் கோவி.செழியனிடம் மனு அளிக்கப்பட்டது.