திருவில்லிபுத்தூர், டிச.19- அகில இந்திய விவசா யத் தொழிலாளர்கள் சங்கத் தின் விருதுநகர் மாவட்ட பத் தாவது மாநாடு வத்திராயி ருப்பில் நடைபெற்றது. மாநாட்டுக் கொடியை கனகராஜ் ஏற்றி வைத்தார். பிரதிநிதிகள் மாவட்டத் தலை வர் பூங்கோதை தலைமை யில் நடைபெற்றது. வர வேற்பு குழு செயலாளர் பழ னிச்சாமி வரவேற்ற்றார் மாநி லச் செயலாளர் அண்ணா மலை மாநாட்டை துவக்கி வைத்தார். வேலை அறிக்கை யை மாவட்டச் செயலாளர் சுந்தரபாண்டியனும், வரவு-செலவு அறிக்கையை மாவட் டப் பொருளாளர் ஜோதி லட்சுமியும் சமர்ப்பித்தனர். மாநாட்டை வாழ்த்தி தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் முரு கன், சிஐடியு மாவட்டச் செய லாளர் தேவா, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் முத்துக்குமார் வாலிபர் சங்க மாவட்டச் செய லாளர் பாரத் ஆகியோர் பேசி னர். மாநாட்டில் மாவட்டத் தலைவராக பூங்கோதை மாவட்டச் செயலாளராக சுந்தரபாண்டியன் பொரு ளாளராக ஜோதிலட்சுமி மாவட்டத் துணைத் தலை வர்களாக மலைச்சாமி, பழ னிச்சாமி, ஜெயக்குமார், மாவட்டத் துணைச் செயலா ளர்களாக ராஜேந்திரன், கன கராஜ், பூமிநாதன், ஆகி யோர் உள்ளிட்ட மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது.
மாநாட்டில், 100 நாள் வேலை திட்டத்தில் நிதி மற் றும் ஆட்களை குறைக்கக் கூடாது. முதியோர் பென் சன் பெறுவோர் மாற்றுத்திற னாளிகள் உட்பட எல்லோ ருக்கும் வேலை வழங்க வேண்டும். முழுமையாக நூறு நாட்களும் வேலை வழங்க வேண்டும். குடி மனை, பட்டா, வழங்க வேண் டும் என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட் டன. மாநாட்டை மாநிலச் செயலாளர் பழனிச்சாமி, நிறைவு செய்து பேசினார். பெனரி நன்றி கூறினார். முன்னதாக மாநாட்டு கொடி தோழர் சந்திர மோகன் நினைவாக ஆமத் தூரில் இருந்து ராஜேந்திரன் தலைமையில் கொண்டு வரப்பட்டது. வத்திராயிருப்பு முத்தாலம்மன் திடலில் நடந்த கொடிப் பயண வர வேற்பு நிகழ்ச்சிக்கு வர வேற்புக்குழுத் தலைவர் சுப்பிரமணி தலைமை வகித்தார். தங்கபாண்டியன் வரவேற்றார். பயணக்குழு வை வரவேற்று அர்ஜுனன் பேசினார்.