மதுரை, செப்.14- சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் பக்கத்து கடைக்காரர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சாட்சியம் அளித் துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் 19 அன்று காவல் துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இதுதொடர்பாக எழுந்த குற்றச்சாட் டின் கீழ் தொடரப்பட்ட வழக்கில் சாத் தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பால கிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 பேரின் மீது சிபிஐ தரப்பில் முதற்கட்டமாக 2027 பக்கம் குற்றப்பத்திரிகையும், இரண்டாம் கட்டமாக 400 பக்கம் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் கடந்த இரு ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்றுவருகிறது. இந்த வழக்குகளில் 104 சாட்சிகளில் இதுவரை 60-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் சாட்சிய விசாரணை நடத்தப்பட்டு தொடர்ந்து சாட்சிய விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், இந்த வழக்கில் விசார ணையானது மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி தமிழரசி முன்பு வியாழனன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சாத்தான்குளம் பென்னிக் ஸின் பக்கத்து கடைக்காரர் பிரபு நீதி மன்றத்தில் ஆஜராகி சாட்சியமளித்தார். அதில் இவருடைய கடையின் சிசிடிவி பதிவு கள் மூலம் ஜெயராஜ் மற்றும் பென்னிக்சை சாத்தான்குளம் காவல்துறையினர் விசா ரணை என்ற பெயரில் அழைத்து சென்றது தெரியவந்தது குறிப்பிடத்தக்கது. அவரிடம் கைது செய்யப்பட்டவர்களின் தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசா ரணை செய்தனர். அப்போது அவர், ஜெய ராஜும் பென்னிக்சும் காவல்துறையினர் அழைத்ததையடுத்து எந்தவித பிரச்சனை யும் செய்யாமல் காவல் நிலையம் சென் றதை உறுதிப்படுத்தினார். தந்தையும், மகனும் கடை முன்பு உருண்டு பிரண்டு பிரச்சனை செய்தார்கள் என்று காவல்துறையினர் கூறி வந்த நிலை யில், இவர் அளித்த சாட்சியம் வழக்கில் முக்கியமாக கருதப்படுகிறது. மேலும் அடுத்த கட்டமாக வழக்கை தொடக்கத்தில் விசாரித்த கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் செப்.20 ஆம் தேதி விசாரிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.