மதுரை, ஆக.1- மதுரை மாவட்டம் பொதும்பு ஊராட்சிக்கு உட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளியில் சுப்பிரமணியன்- திருநாவுக் கரசி ஆகியோரின் மகன் வீராசாமி என்பவர் 1ஆம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை பயின்று வந்துள்ளார். இந்த நிலையில் இவர் 10 ஆம் வகுப்பின் பொதுத் தேர்வில் 2 பாடங்களில் தோல்வி அடைந்து. மீண்டும் மறுத்தேர்வு எழுதி தேர்ச்சியும் பெற் றுள்ளார். இந்த நிலையில் தேர்ச்சி பெற்ற பின்பு மீண்டும் 11 வகுப்பு பயில்வதற்காக விண்ணப்பித்துள்ளார். ஆனால் பள்ளி தலைமையாசிரியர் மாணவனை பள்ளி யில் சேர்க்க அனுமதித்த நிலையில், அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரி யும் முத்துலட்சுமி என்ற ஆசிரியர் அம் மாணவன் பயில்வதற்கு எதிர்ப்பு தெரி வித்ததாக கூறப்படுகிறது. மாணவரின் பெற்றோர் பள்ளியில் மகனை சேர்க்கும்படி கேட்க சென்ற போது அவமரியாதையாக பேசியதாக கூறப்படு கிறது. இதனை தொடர்ந்து ஆங்கில ஆசிரி யர் முத்துலட்சுமியின் கணவர் நான் வாடிப்பட்டி எஸ்ஐ பாலமுருகன் எனக்கூறி சம்பந்தப்பட்ட மாணவனின் வீட்டிற்கு லத்தியுடன் சென்று கொலை மிரட்டல் விடுத்ததாக பெற்றோர் தரப்பில் கூறப்படு கிறது. அத்துடன் தொடர்ச்சியாக மாணவ னின் பெற்றோருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்கள் மகனை அரசு பள்ளியில் சேர்க்க முடியாது. நான் போலீஸ் ரவுடி எனக்கூறி மீண்டும் மிரட்டி உள்ளார். அரசு பள்ளியில் ஏழை மாணவனுக் கான கல்வி மறுக்கப்படுவது கண்டிக் கத்தக்கது, எனவே பொதும்பு அரசு பள்ளி யில் ஆங்கில ஆசிரியர் முத்துலட்சுமி மீது துறை ரீதியான நடவடிக்கையும், அவரது கணவர் வாடிப்பட்டி காவல் சார்பு ஆய்வாளர் பாலமுருகன் மீது குற்ற வியல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கத்தின் மதுரை புறநகர் மாவட்டக்குழு விடுத் துள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள ளது.