மதுரை, ஜன. 6- மதுரை சுப்பிரமணிய புரம் - 1வது தெருவில் டாஸ்மாக் மதுபான கடை அமைப்பதற்கு மதுரை நிர் வாகம் ஏற்பாடு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரி வித்து அப்பகுதியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொது மக்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராட்டத் தில் ஈடுபட்டனர். மதுரை ஜெய்ஹிந்த் புரம், சுப்பிரமணியபுரம், சோலை அழகுபுரம் என இப்பகுதிகளை சுற்றி ஏற்க னவே ஆறு டாஸ்மாக் மது பான கடைகள் உள்ளன. தற்போது 77 ஆவது வார்டு சுப்பிரமணியபுரம் - 1வது தெருவில் புதிதாக டாஸ்மாக் மதுபான கடை அமைப்பதற்கான ஏற்பாடு கள் செய்யப்பட்டு விற்ப னைக்கான மதுபான பாட்டில் கள் கொண்டு வந்து வைக் கப்பட்டன. இதற்கு இப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்த னர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகை யில், இப்பகுதியில் பல பள்ளி கள்,கல்லூரிகள் உள்ளன. மாணவ - மாணவிகள், பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் சாலையில் மதுபானக்கடை அமைக்கப்பட்டால் மிகப் பெரும் இடையூறும் தொந்தரவும் ஏற்படும். சில ஆண்டுகளுக்கு முன் இப் பகுதிக்கு அருகில் மதுபான கடை அமைப்பதற்கான ஏற் பாடுகள் செய்யப்பட்ட நிலை யில் அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பை தெரிவித்தோம்.பின்னர் உடனடியாக கடை அப்புறப்படுத்தப்பட்டது. தற்போது மீண்டும் கடையி னை அமைப்பதற்கு மதுரை டாஸ்மாக் நிர்வாகம் ஏற்பாடுகளை செய்து வரு கிறது என்று தெரிவித்தனர். இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், திமுக, தமு முக, இப்பகுதி மாமன்ற உறுப்பினர் ராஜ் பிரதாபன், இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் டேவிட் உள்ளிட்டோர் பங்கேற்றனர். போராட்டத்தை தொ டர்ந்து டாஸ்மாக் மண்டல அதிகாரியை அங்கிருந்த காவல்துறையினர் தொடர்பு கொண்டு பேசிய போது கடையை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மது பாட்டில்களை அப்புறப்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படும் என்று கூறினார். இதனை தொடர்ந்து போராட்டம் நடத்தியவர்களிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி கடையை அகற்றுவ தற்கான ஏற்பாடுகளை செய்கிறோம் என்று கூறினர். இதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.