தேனி, மே 5- டாஸ்மாக் குடோன்களில் பணிபுரியும் சுமைப் பணி தொழிலாளர்களுக்கு தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியாக கூலி பெட்டி ஒன்றுக்கு ரூ.3.50 வழங்க வேண்டும், தொழி லாளர்களுக்கு அடிப்படை வசதி செய்ய வேண்டும், அம்ம்புத்தூரில் உள்ளது போல ஏற்றி, இறக்க டிராலி வசதி ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி தேனியில் சிஐடியு டாஸ்மாக் சுமைப் பணி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளைத்தலைவர் காளிச்சாமி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.ராமச்சந்திரன், மாவட்டப் பொருளாளர் ஜி.சண்முகம், மாவட்டத் துணைச்செயலாளர் டி.ஜெய பாண்டி, ஏ.சி.காமுத்துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.