கரும்பு விவசாயிகளை ஏமாற்றிய தஞ்சை மாவட்டம் ஆரூர் சக்தி சர்க்கரை ஆலை நிர்வாகத்தைக் கண்டித்தும் போராடும் கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சிவகங்கை அரண்மனை வாசலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் வீரபாண்டி தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் முத்துராமு, மாவட்ட செயலாளர் மோகன், மாவட்ட பொருளாளர் விஷவம் ஆகியோர் பேசினர். நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.