districts

img

மலேசியாவில் பரிசு பெற்ற “சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள்”

மதுரை, செப்.10-  மதுரை நம்பி எழுதிய “சிறையில் ஒளிரும் நட்சத்தி ரங்கள்” நூலை மலேசியா வில் நடைபெற்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிறந்த நூலாகத் தேர்வு செய்து பரிசு வழங்கிப் பாராட்டியுள்ளது. அதைத் தொடர்ந்து நூலின் எழுத்தாளர் மதுரை  நம்பியை தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கத்தின் மதுரை மாநகர் மாவட்டக்குழு சார்  பில் பாராட்டிக் கௌரவித் தது.  மதுரை லயோலா தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பாராட்டு நிகழ்விற்கு மாவட்  டத் தலைவர் இளங்கோ கார்  மேகம் தலைமை வகித்தார் மாவட்டச் செயலாளர் ஸ்ரீரசா வரவேற்றுப் பேசி னார். மதுரை மக்களவை உறுப்பினர்.வெங்கடேசன், மாநில செயற்குழு உறுப்பி னர் மணிமாறன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப் பினர் எஸ்.கண்ணன், விசிக  மதுரை-சிவகங்கை மண்ட லச் செயலாளர் த.மாலின், மதுரை பாலன், மருத்து வர் செல்வராஜ் கிளைச் செய லாளர் சாந்தி செல்வராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பூ.பாண்டிய முத்துக்குமார் நிகழ்வை ஒருங்கிணைத்தார். நூல் ஆசிரியர் மதுரை நம்பி ஏற்பு ரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் நௌஷாத் நன்றி கூறினார்.