மதுரை, ஜன.31- மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக மக்கள் ஒற்றுமை மேடை மதுரை மாவட்டம் சார்பில் மத நல்லிணக்க கருத்தரங் கம் மாநகர் மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் என். ஜெயச்சந் திரன் நடைபெற்றது. புற நகர் மாவட்ட ஒருங்கிணைப் பாளர் உமா மகேஷ்வரன் வரவேற்று பேசினார், மாநில ஒருங்கிணைப்பாளர் பேரா சிரியர் அருணன் சிறப்புரை யாற்றினார். சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன், பெரியார் நெறியாளர் பி. வரதராசன், சோக்கோ அறக்கட்டளை எஸ் . செல்வ கோமதி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாநகர் மாவட் டச் செயலாளர் மா . கணே சன், மதுரை சட்ட விழிப்பு ணர்வு ஒருங்கிணைப்புக் குழு முனைவர் . சகாய பிலோ மின்ராஜ், மனிதநேய மக்கள் கட்சி எஸ். மைதீன் சேட்கான், ஜனநாயக மாதர் சங்க மாநி லச் செயலாளர் எஸ்.கே. பொன்னுதாய் ஆகியோர் பேசினர்.ஏ. போனிபேஸ் நன்றி கூறினார். கருத்த ரங்கில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மகாத்மா காந்தியை படுகொலை செய்த நாது ராம் கோட்சே மற்றும் வழி காட்டியாக இருந்த சாவர்க் கர் படங்களுடன் காளவாசல் அருகில் சொக்கலிங்கநகர் மெயின் ரோட்டில் பிளக்ஸ்பேனர் வைத்திருந்த னர். இதுபோன்ற செயலில் ஈடுபடும் நபர்கள் மீதும் அமைப்பு மீதும் மதுரை மாந கர் காவல்துறை கடுமை யான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.