சென்னை, செப்.5- ‘மாநில பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமிக்க யுஜிசி விதிகள் மட்டும் பின்பற்றினால் போதுமானது. யுஜிசி சார்பில் உறுப்பினரை சேர்க்க வேண்டும் என்ற கட்டாய விதிமுறை இல்லை’ என துணைவேந்தர் நியமன விவகாரம் குறித்து ஆளுநருக்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது. தமிழ்நாட்டில் கோவை பாரதியார் பல்கலைக்கழக, கல்வியியல் பல்கலைக் கழகம் மற்றும் அண்மையில் காலியான சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பணியிடங்கள் என 3 பல்கலைக்கழக துணை வேந்தர் பணியிடங்கள் காலியாக இருந்து வருகின்றன. துணைவேந்தர் தேடல் குழுவில் பல்கலைக்கழக செனட் உறுப்பினர்கள், தமிழ்நாடு அரசின் பிரதிநிதி ஒருவர் மற்றும் ஆளுநர் தரப்பில் ஒருவர் இடம் பெறுவர். இந்தக் குழுதான், துணைவேந்தர் பதவிக்கான நபர்களை தேர்வு செய்ய ஆளுநருக்கு பரிந்துரைக்கும். இந்த நடை முறைதான் பின்பற்றப்பட்டு வந்தது. இந்த நிலையில், துணைவேந்தர் தேடல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதியை சேர்க்க வேண்டும் என ஆளுநர் நிபந்தனை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆளுநரின் இந்த கருத்துக்கு, தமிழ்நாடு உயர் கல்வித்துறை சார்பில் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்தக் கடிதத்தில், ‘பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகள் படி, மாநில பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமிக்க யுஜிசி விதிகள் மட்டும் பின்பற்றி னால் போதுமானது. யுஜிசி சார்பில் உறுப்பி னரை சேர்க்க வேண்டும் என்ற கட்டாய விதிமுறை இல்லை’ என்ற விதிமுறைகள் உட்பட பல்வேறு அம்சங்களை சுட்டிக்காட்டி தமிழ்நாடு ஆளுநருக்கு தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.