சென்னை,அக்.3- வாரம் 3 முறை இயக்கப்படும் தாம்பரம்-இராமேஸ்வரம் சிறப்பு ரயில் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியான செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தாம்பரத்தில் இருந்து இராமேஸ்வரத்துக்கு சிறப்பு ரயில் (06103) வியாழக்கிழமை, சனிக்கிழமை, திங்கட்கிழமை என வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், இந்த ரயில் பயண நேரத்தில் அக்டோபர் 3 ஆம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தாம்பரத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு திருவாரூருக்கு இரவு 11.15 மணிக்கு சென்றடையும். ஆனால் இனி திருவாரூருக்கு இரவு 10.50 மணிக்கும் சென்றடையும். அங்கிருந்து இரவு 11 மணிக்கு, திருத்துறைப்பூண்டியில் இரவு 11.25 மணிக்கும், முத்துப்பேட்டையில் இரவு 11.48 மணிக்கும், அதிராம்பட்டினத்தில் இரவு 11.59 மணிக்கும், பட்டுக்கோட்டை யில் மறுநாள் அதிகாலை (நள்ளிரவு) 12.16 மணிக்கும், காரைக்குடியில் அதி காலை 2.20 மணிக்கு, சிவகங்கையில் அதிகாலை 3 மணிக்கு, மானாமதுரை யில் அதிகாலை 4 மணிக்கு புறப்படும். அதிகாலை 4.55 மணிக்கு இராமநாதபுரத்திற்கு சென்றடையும். இவ்வாறு அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.