districts

மதுரையில் மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்கும் மதவெறி அமைப்புகள் மீது நடவடிக்கை எடுத்திடுக!

மதுரை, ஜூலை 28- மதுரை மாவட்டத்தில் மத நல்லி ணக்கத்தையும், மக்கள் ஒற்றுமை யையும் சீர்குலைக்க நினைக்கும் மதவெறி அமைப்புகள் மீது மாவட்ட நிர்வாகமும், காவல்துறை யும் உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநகர் - புறநகர் மாவட்ட செயலாளர்கள் மா. கணேசன், கே. ராஜேந்திரன் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதுரை மாநகர் மற்றும் புற நகர் பகுதிகளில் கடந்த சில ஆண்டு களாக இந்து மத வெறி சக்தியின ரால் சிறுபான்மையினராக உள்ள  கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்  துவதும், வழிபாட்டு தலங்களை சேதப்  படுத்துவதும், கட்டாய மதமாற்றம்  செய்கின்றனர் என காவல் நிலை யத்தில் பொய்யான புகார் செய்வது  தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்  னர் கூடல்நகர், சிக்கந்தர் சாவடி பகுதியில் கிறிஸ்தவர்கள் வழிபாடு  செய்து கொண்டிருந்த சர்ச் மீதும்,  பெண்கள் மீதும் இந்து முன்னணி அமைப்பினரின் தாக்குதல் நடத்தி னர். அன்றைய தினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜனநாயக அமைப்புகளும், சிறுபான்மை மக்  கள் நலக் குழுவும், மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பினரும் பாதிக்கப் பட்ட மக்களுக்கு உரிய நீதி கிடைக்க  போராடியது. அதனை தொடர்ந்து மதுரை மாவட்ட நிர்வாகமும் காவல்  துறையினரும் தலையீடு செய்தனர்.

இந்த நிலையில் கடந்த ஜூன் 24ஆம் தேதி மீனாம்பாள்புரம் பகு தியில் இறைபணி செய்து வரும் பாஸ்டர் மைக்கேல் மற்றும் அவரது  மனைவி ஆகியோர் குழந்தையை கடத்தியதாக மதவெறி சக்திகள் கொடுக்க பொய்யான தகவலின் அடிப்படையில் செல்லூர் காவல் துறையினர் இருவரையும் கைது செய்துள்ளனர். தகவல் அறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாமன்ற உறுப்பினர் க.  திலகர், ஜெயமூர்த்தி, சிறுபான்மை  மக்கள் நலக்குழு மாவட்ட செய லாளர் கே.அலாவுதீன், திமுக மாமன்ற உறுப்பினர் த. ஜெயராஜ் ஆகியோர் காவல்துறையினரிடம் இது பொய் புகார்; எனவே அந்த புகரை திரும்பப் பெற வேண்டும் என்று காவல்துறையிடம் வலி யுறுத்தினர்.

கடத்தியதாக சொல்லப்பட்ட குழந்தைகளையும் அவரது தாயா ரையும் காவல்துறையினர் அழைத்து  விசாரணை செய்தனர்.இதில்  குழந்தை ‘என்னை அடையாளம் தெரியாதவர்கள் வாயையும், கண்  ணையும் பொத்திக் கடத்திச் சென்ற னர்’ என காவல் துறையினரிடம் சொல்லச் சொன்னார்கள் என்று  தெரிவித்தது. அதன் அடிப்படை யில் பாஸ்டர் மற்றும் அவரது மனைவி விடுவிக்கப்பட்டுள்ளனர்.

செல்லூர் காவல் ஆய்வாளரின் பொருத்தமற்ற நடவடிக்கை

மதவெறி சக்திகளின் பொய் யான புகார் மீது உரிய காலத்தில் விசாரணை செய்யாமலும் பாஸ்ட ரின் உறவினர்களையோ, வழக்க றிஞர்களையோ சந்திக்க அனு மதிக்காமலும் பாஜக நிர்வாகி களை மட்டும் அனுமதித்து ஒரு தலைபட்சமாக நடந்து கொண்ட செல்லூர் - டி2 காவல் நிலைய ஆய்வாளரின் நடவடிக்கை பொருத்தமற்றதாக இருந்துள்ளது. அதற்கு உதாரணம் காவல்துறை உயர் அதிகாரிகள் நேரில் வந்து விடுதலை செய்ய சொன்ன பின் னர் இரவு 9 மணிக்கு பாஸ்டர், அவரது மனைவி விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மன உளைச்சலுக்கும் மதவெறி சக்திகளின் அச்சுறுத்தலுக்கும்  ஆளான பாஸ்டர் மைக்கேல் அவர் களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கப்பட்டது. இது போன்ற சம்பவங்கள்  நடைபெறாமல் தடுப்பதற்கு மதுரை மாநகர், புறநகர் பகுதிகளில் மத நல்லிணக்கத்திற்கும் மக்கள் ஒற்றுமைக்கும் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்த முயற்சித்து வரும் மதவெறி சக்திகளின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுபான்மையினர் வழிபாட்டு தலங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித் துள்ளனர்.