இளநிலை நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் வழங்கிய விவகாரம், ஆள் மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடு சம்பவங்கள் தொ டர்பாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் தரப்பில் இருந்து 40-க்கும் மேற்பட்ட வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் பல்வேறு உயர்நீதி மன்றங்களில் விசாரணையுடன் நிலுவை யில் உள்ள நிலையில், ஒரு சில வழக்கு கள் உச்சநீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், நீட் முறைகேடு தொடர்பாக அனைத்து உயர்நீதிமன் றங்களிலும் உள்ள வழக்குகளை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த மனு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையி லான அமர்வு முன் திங்களன்று விசா ரணைக்கு வந்த நிலையில், விசாரணை முடிவில்,”உயர்நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்த மனுதாரர்கள் இதற்கு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும்” என தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உத்தரவிட்டார்.