districts

மதுரை முக்கிய செய்திகள்

கூடலூரில் ராணுவவீரர்  உடல் தகனம்

தேனி, அக்.31- தேனி மாவட்டம் கூடலூர் ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்த கவுதம் (31). இவர் 13 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய  எல்லைப் பாதுகாப்புப் படையில் (பி.எஸ்.எஃப்) சேர்ந்தார். தற்போது மேற்குவங்க எல்லையான டாங்கிபாரா எனும்  இடத்தில் சிவில் எலக்ட்ரிஷியனாக பணிபுரிந்து வந் தார். கவுதமுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திரு மணம் முடிந்து கவுசல்யா (25) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கடந்த 28-ஆம் தேதி பணியில் இருந்த போது எதிர்பாராவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் உயிரி ழந்தார். இவரது உடல் கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு  விமானம் மூலமும் பின்பு அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் கூடலூருக்கு கொண்டு வரப்பட்டது. எல்லைப் பாதுகாப்புப் படை காவல் துணைக் கண்கா ணிப்பாளர் நெகில் தலைமையில் பின்பு 21 குண்டுகள் முழங்க மரியாதை அளிக்கப்பட்டு அவரது உடல் மின்மயா னத்தில் தகனம் செய்யப்பட்டது.

இரு சக்கர வாகனங்கள் மோதல்: ஒருவர் பலி

அருப்புக்கோட்டை, அக்.31-  அருப்புக்கோட்டை அருகே உள்ள பெரியதும்ம குண்டுவைச் சேர்ந்தவர் அழகுமுத்து(22). இவர் தனது இரு சக்கர வாகனத்தில் வெளியூர் சென்றுவிட்டு அருப்புக்  கோட்டை நோக்கி வந்துகொண்டிருந்தாராம். அப்போது எதிர்த் திசையில் அருப்புக்கோட்டை ராம சாமிபுரத்தைச்சேர்ந்த ஆனந்தபாபு (36) என்பவர் மற்றொரு இரு சக்கர வாகனத்தல் வந்து கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக இரு வாகனங்களும் நேருக்கு நேர்  மோதி விபத்துக்குள்ளானது.  இதில் அழகுமுத்துவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து தொடர்பாக அருப்புக்கோட்டை நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக மாத இதழ் செய்தியாளர் கைது

தேனி, அக்.31- பெரியகுளம் அருகே உள்ள டி.வாடிப்பட்டி ஊராட்சி யில் ஆறாவது வார்டு உறுப்பினராக இருப்பவர் அழ கம்மாள். இவர் அவரது வார்டு பகுதிகளில் முறையாக தூய்மைப் பணிகள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை  எனத் தொடர்ச்சியாக அதே பகுதியில் சேர்ந்த பாண்டியன் என்பவர் முறையிட்டு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த அழகம்மாளின் கணவர் கணே சன் மற்றும் அவரது நண்பர் வல்லரசு என்பவர் இருவரும் சேர்ந்து பாண்டியனிடம் வாக்குவாதத்தில் ஈடு பட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் வல்லரசு என்ப வர் அவரது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த துப் பாக்கி ஒன்றை எடுத்துக் காட்டி மிரட்டி விட்டு தனது இடுப்பில் வைத்துக் கொண்டு அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இது குறித்து பாண்டியன், தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் தேவ தானப்பட்டி காவல்துறையினர் வல்லரசு என்பவரைக் கைது செய்து அவரிடம் இருந்து துப்பாக்கி ஒன்றை பறி முதல் செய்துள்ளனர். மேலும் நடைபெற்ற விசாரணை யில் வல்லரசு என்பவர் போலீஸ் புலனாய்வு மாத இதழ்  என்ற இந்திய அரசால் அனுமதி பெறாத மாத இதழில் பணிபுரிந்து வருவது தெரியவந்துள்ளது.

அஞ்சல் துறையின் விபத்துக் காப்பீடு திட்ட சிறப்பு முகாம் 

சின்னாளப்பட்டி, அக்.31- திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் அஞ்சல் துறை சார்பில்  விபத்துக் காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் 150க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்தக் காப்பீட்டு திட்டம் மூலம் ஆண்டிற்கு ரூ.399 செலுத்தினால் சாலை மற்றும் தீ விபத்தில் உயிரிழப்பு, நிரந்தர ஊனமடைபவர்கள், நிரந்தரப் பகுதி ஊனம் அடைபவர்கள், விபத்து ஊனம், பக்கவாதம் ஆகிய பாதிப்புகளுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும். படுகாய மடைபவர்களின் மருத்துவச் செலவுக்கு ரூ.30 முதல் 60 ஆயிரம், மருத்துவமனை அறைக்கான கட்டணம் பத்து நாளைக்கு தினமும் ஆயிரம் ரூபாய் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.

ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை எரிக்க முயற்சி

தூத்துக்குடி,அக். 31  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளை ஞர் ஒருவர் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவ ணங்களை எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் முதல் தெருவை சேர்ந்த வர் சுந்தர். இவர் திங்களன்று காலை தனது மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அவர் திடீரென தனது கையில் வைத்திருந்த  ரேஷன் கார்டு, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை எரிக்க முயன்றார். இதைய டுத்து அவரது மனைவி அவரை தடுக்க முயன்றார். மேலும் அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.  பின்னர் சிப்காட் போலீசார் அவரை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில் சுந்தர், ராஜகோபால் நகர் 1ஆவது தெருவில் வீட்டை விலைக்கு வாங்கியுள்ளார். ஆனால் வீட்டை விற்றவர் பத்திரம் முடிக்கவில்லை என்று கூறப்படு கிறது. இதுகுறித்து சுந்தர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் சில தினங்களுக்கு முன்னர் மில்லர்புரத்தில் உள்ள டவரில் ஏறி போராட்டம் நடத்தினார். அவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர். இந்நிலையில் திங்களன்று அவர் ஆவணங்களை எரிக்க முயன்றுள்ளார். இந்த சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

வத்தலகுண்டுவில் மூடப்பட்ட உழவர் சந்தையை  திறக்க விவசாயிகள் வலியுறுத்தல்

வத்தலகுண்டு, அக்.31- வத்தலகுண்டுவில் மூடப்பட்டுள்ள உழவர் சந்தையை திறக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2009- ஆம் ஆண்டு திமுக ஆட்சி யில் வத்தலகுண்டு தினசரி மார்க்கெட் அருகே எண்ணெய் கடை முக்கு என்ற இடத்தில்உழவர் சந்தைதிறக்கப்பட்டது. ரூ. 22 லட்சம் மதிப்பிலான உழவர்சந்தையை அப்போதைய ஆட்சியர் கிர்லோஷ் குமார் தலைமையில்அமைச்சர் ஐ. பெரியசாமி திறந்து வைத்தார். உழவர் சந்தையில் உள்ள 55 கடை களிலும் பல்வேறு காய்கறிகள் விற்கப் பட்டன.இதனால் இடைத்தரகர்கள் கமிஷன்இல்லாமல் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை விற்று வந்தனர். அதி முக ஆட்சியின் போது உழவர் சந்தை மூடப்பட்டது.  இது குறித்து விவசாயிகள் கூறுகை யில், வத்தலகுண்டு-வை சுற்றியுள்ள கிரா மங்களில் பலா உட்பட அனைத்து பழங்க ளும்,இங்கிலீஷ் காய்கறி உட்பட அனைத்து காய்கறிகளும் பயிரிட்டு வருகிறோம். உழ வர் சந்தை இருந்தபோது விளை பொருட் களை விற்பது எளிதாகஇருந்தது. நல்ல  விலையும் கிடைத்தது. தற்போது இடைத்தர கர்கள் பிடியில் சிக்கித் தவித்து வருகி றோம். விவசாயிகள் நலன் கருதி மீண்டும் உழவர் சந்தையை திறக்கவேண்டும் என்ற னர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ராமசாமி, மாவட்டத் தலைவர் பெருமாள் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில், “உழவர் சந்தை சந்தை  விவசாயிகளுக்காகக் கொண்டு வரப்பட்  டது. அதை கடந்த ஆட்சியில் மூடிவிட்ட னர். விவசாயிகளுக்கு அரசே உரிய விலை யை நிர்ணயம் செய்து மீண்டும் உழவர் சந்தையை திறக்க வேண்டுமென்றனர்.

சிபிஎம் உதய தினக் கருத்தரங்கம் 

திண்டுக்கல், அக்.31- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உதய தினத்தை  முன்னிட்டு செவ்வாய்க்கிழமை மாலை ஐந்து மணிக்கு  நாகல்நகரில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெறுகிறது. மாநிலச்செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம், மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிதானந்தம் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். அதே போல் மாலை நான்கு  மணிக்கு எரியோட்டில் நடைபெறும் நிகழ்ச்சியில் மதுக்கூர்  இராமலிங்கம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.  பழனியில் மாலை நான்கு மணிக்கு நடைபெறும் கருத்தரங்கில் மாநிலக்குழு உறுப்பினர் என்.பாண்டி பங்கேற்றுப் பேசுகிறார்.

சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை: பேரூராட்சி உறுதி

வத்தலகுண்டு, அக்.31- வத்தலகுண்டு பேரூராட்சிக் கூட்டம் தலைவர் சிதம்பரம் தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் தன்ராஜ் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் தர்ம லிங்கம்வரவேற்றார்.தலைமை எழுத்தர் செல்லப்பாண்டி தீர்மானங்களை வாசித்தார்.  வத்தலகுண்டுவில் உள்ள சாலையோர வியாபாரி கள் கணக்கெடுக்கப்பட்டு அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி அவர்கள் சிரமமம் இன்றி வியாபாரம் செய்ய ஏற்ற சூழல் அமைத்து தருவது என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. கூட்டத்தில் பேரூராட்சி மன்ற உறுப்பி னர்கள் சின்னத்துரை, ரவிச்சந்திரன், சிவா, மணி வண்ணன், முத்துமாரியம்மாள்,ராமுத்தாய், சுமதி, தமி ழரசி, அழகு ராணி, ஷியாமளா ஆகியோர் கலந்து கொண்ட னர். துப்புரவு ஆய்வாளர் சரவணன் நன்றி கூறினார்.

தி வயர் இணையதள ஆசிரியர்கள் வீடுகளில் காவல்துறை சோதனை

புதுதில்லி, அக்.31- தி வயர் இணையதள ஆசிரியர்கள் சித்தார்த் வரத ராஜன், எம்.கே.வேணு மற்றும் ஜாஹ்னவி சென் ஆகியோ ரின் வீடுகளில் தில்லி காவல்துறை திங்கள்கிழமை சோதனை நடத்தியதாக ஸ்கோரல்.இன் இணையதளம் தெரிவித்துள்ளது.  பாரதிய ஜனதா கட்சியின் சமூக ஊடகத் தலைவர் அமித் மாளவியா அளித்த புகாரின் அடிப்படையில் அவர்கள் மீது மோசடி, போலி, அவதூறு மற்றும் குற்றச்  சதி ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த சோதனைகள் நடந்துள்ளது. காவல்துறையினர் எம்.கே.வேணு இல்லத்திற்கு திங்கள் மாலை 4.40 மணிக்கு வந்துள்ளனர். பின்னர் ஆறு  மணிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர். எம்.வேணுவின் ஐபோன் மற்றும் ஐபேடை எடுத்துச் சென்றுள்ளனர். இதே போல் வரதராஜன் வீட்டிலும் சோதனை நடந்ததை வேணு உறுதி செய்தார். வரதராஜன், வேணு மற்றும் சென் ஆகியோரைத் தவிர,  முதல் தகவலறிக்கையில் மற்றொரு ஆசிரியரான சித் தார்த் பாட்டியாவின் பெயரையும் குறிப்பிட்டுள்ளது.

காவலாளி மீது துப்பாக்கிச்சூடு காவல்கண்காணிப்பாளர் விளக்கம்

பழனி, அக்.31- பழனி அருகே பெத்தநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள தனியாருக்குச் சொந்தமான தோட்டத்தை கும்ப கோணத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் குத்த கைக்கு எடுத்து நடத்தி வருகிறார். இந்தத் தோட்டத்தில் அவர் சோளம் உள்ளிட்ட வற்றைப் பயிரிட்டுள்ளார். தோட்டத்தை பார்த்துக்கொள் திருவிடைமருதூரைச் சேர்ந்த கலையரசன் மகன் கார்த்தியை (24) வேலைக்கு அமர்த்தினார். சனிக்கிழமை இரவு காவல் பணியில் கார்த்தி ஈடுபட்டிருந்தபோது, தோட்டத்தில் சப்தம் கேட்கவே தோட்ட வீட்டிலிருந்து  வெளியே வந்து பார்த்தார். அப்போது எங்கிருந்தோ வந்த குண்டு ஒன்று அவ ரது தோளில் பாய்ந்தது. இதில் அவர் காய மடைந்தார். உடனடியாக மோகன்ராஜ் மற்றும்  அருகே உள்ள தோட்டப் பணியாளர்கள் கார்த்தியை மீட்டு பழனி அரசு மருத்து வமனையில் சேர்த்தனர். அங்கு முத லுதவி சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தீவிர சிகிச்சைக்காக அவரை மதுரைக்கு அனுப்பி வைத்தனர். மதுரை அரசு மருத்து வமனையில் அவரது உடலிலிலிருந்த குண்டை மருத்துவர்கள் அகற்றினர். இந்தச் சம்பவம் குறித்து செய்தியா ளர்களிடம் பேசிய திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், “ துப்பாக்கிச்சூடு கவனக்குறைவால் நடந்த விபத்து. லைசென்ஸ் தேவையில்லாத ஏர் ரைஃபிள் தான் அது. சில கருவிகளை மாற்றி வேட்டைக்கு பயன்படுத்தும் வகை யில் துப்பாக்கியில் மாற்றம் செய்துள்ள னர். இதை மோகன்ராஜ், கிருஷ்ணமூர்த்தி மற்றும் கார்த்தி ஆகியோர் உபயோ கப்படுத்தி பார்த்தபோது தவறுதலாக கார்த்தி மீது குண்டு பாய்ந்துள்ளது. இது  தொடர்பாக மோகன்ராஜ், கிருஷ்ண மூர்த்தி கைது செய்யப்பட்டு சிறையில டைக்கப்பட்டனர்.