பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பும் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கீழையூர் மற்றும் தனியாமங்கலம் கிராமங்களில் கரும்பு கொள்முதல் செய்வதற்காக ஜனவரி 4 புதனன்று மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ். அனீஸ் சேகர் ஆய்வு மேற்கொண்டர்.