districts

img

சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள் ஆண்டாள்

திருவில்லிபுத்தூர், ஜூலை 31- ஆண்டாள் தமிழ கத்தில் 8ம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களுள் ஒருவர். வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண்ணாவார். ஆண்டாள், திருப்பாவை, நாச்சியார் திரு மொழி என்னும் இரண்டு பாடற் தொகுதி களை இயற்றியுள்ளார். வைணவ சமய நூல்கள் கூறும் இவரது வரலாறு, இறைவன் மீது இவர் கொண்டிருந்த காதலை விளக்கும் வித்தியாசமான ஒரு வரலாறாகும். திரு வில்லிபுத்தூர் நந்தவனத்தில் ஒரு துளசி  செடியின் அடியில் ஆடி மாதம் பூரம்  நட்சத்திரத்தில் மகாலட்சுமியே ஆண்டா ளாக அவதாரம் செய்தார். பெரியாழ்வார் இந்த நந்தவனத்திற்கு வந்தபோது, ஆண் டாளை எடுத்து சுரும்பார் குழற்கோதை என்ற  பெயரிட்டு வளர்த்து வந்தார். அந்த நந்த வனத்தின் மலர்களை தினமும் பறித்து மாலையாக தொடுத்து ரெங்கமன்னாருக்கு வழங்குவது ஆழ்வாரின் முக்கியப்பணி யாகும். தமிழில் நல்ல திறமை கொண்டவராக இருந்தார். கோயிலில் இறைவனுக்கு அணி விப்பதற்காக விஷ்ணுசித்தர் தொடுத்து வைத்திருக்கும் மாலைகளை ஒவ்வொரு நாளும் அவருக்குத் தெரியாமல் தான் அணிந்து கண்ணனுக்கு ஏற்றவளாக தானிருக்கிறோமா என்று கண்ணாடியில் பார்த்து மகிழ்ந்து பின்னர் திரும்பவும் கொண்டுபோய் வைத்துவந்தார். இதனால் கோதை சூடிய மாலைகளே இறைவனுக்கும் சூடப்பட்டன.ஒருமுறை பெருமாள் அணிந்தி ருந்த மாலையில் நீண்ட முடி இருப்பதை கண்ட அர்ச்சகர்கள் அதை எறிந்து விட்டு  வேறுமாலை கொண்டு வரும்படி ஆழ்வாரிடம் கூறிவிட்டனர். பகவானின் சேவையில் தவறு வந்து விட்டதே என்று ஆழ்வார் வருந்தினார். மறுநாளும் மாலை தொடுத்து ஆண்ட வனுக்கு அனுப்பும் சமயத்தில், அந்த மாலை யை ஆண்டாள் அணிவதை கண்டார். ஆண்டாளை கண்டித்தார். அன்று இரவே பெருமாள் ஆழ்வாரின் கனவில் தோன்றி, ஆண்டாள் சூடிய மாலையையே தனக்கு அணிவிக்கும்படி கூறினார். அது முதல் ஆண்டாள் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் பூமாலை மட்டுமின்றி பாமாலையும் சூடி மகிழ்ந்தாள் என்று ஆண்டாள் கோவில் தக்கார் கே.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.