மதுரை, ஏப். 20- மதுரை மாநகராட்சி 26 வது வார்டு நரி மேடு பகுதி சிங்கராயர் காலனியில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தொகுதி மேம்பாடு நிதியில் இருந்து ரூ.8.50 லட்சம் மதிப்பில் பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி வியாழன் அன்று நடைபெற்றது . இதில் 26 ஆவது வார்டு மாமன்ற உறுப்பி னர் சொக்காயி ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் மா. கணேசன், மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜயராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜா. நரசிம்மன், வடக்கு - 2 பகுதிக் குழு செய லாளர் ஏ. பாலு, மாவட்ட குழு உறுப்பினர் கே. அலாவுதீன், வடக்கு மண்டல தலைவர் சர வண புவனேஸ்வரி, கட்டுமான தொழிலாளர் சங்க பகுதிக்குழு தலைவர் ஜாகீர், குடியிருப்பு நலச் சங்க நிர்வாகிகள் நேரு, திலகவதி, வெங்க டேசன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். 58 வது வார்டில் புதிய ரேசன் கடைக்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் மாமன்ற உறுப்பினர்கள் மா. ஜெயராமன், வை. ஜென்னியம்மாள், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநகர மாவட்ட செயலாளர் மா. கணேசன், மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜயராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஜா. நரசிம்மன், மத்திய - 1 ஆம் பகுதிக்குழு செயலாளர் வை. ஸ்டாலின், மாவட்டக்குழு உறுப்பினர் ஏ. பாண்டி, திமுக வட்டச் செயலா ளர் சீனி ரமேஷ் மற்றும் மாநகராட்சி அதிகாரி கள், ஒப்பந்ததாரர் ஆகியோர் கலந்து கொண்ட னர். தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் நிதி யிலிருந்து கரிமேடு ஆரம்ப சுகாதார மையம், பாண்டித்துரை சேதுபதி பள்ளியில் கட்டப்பட்டு வரும் கட்டிடங்களையும் ஆய்வு செய்தனர்.