districts

img

மதுரை - திருமங்கலம் மின்மய ரயில் பாதையில் ஆய்வு

மதுரை, பிப்.14-   மதுரை - திருமங்கலம்  இடையே  மின்மயமாக்கப் பட்ட ரயில் பாதையில் தலை மை முதன்மை மின் பொறி யாளர் ஏ. கே. சித்தார்த்தா  சிறப்பு ரயில் மூலம் செவ்வா யன்று  ஆய்வு செய்தார். ஆய்வு முடிந்தவுடன், புதிய  மின் தடத்தில் 25000 வோல்ட் மின்சாரம் பாய்ச்சப்பட்டு மின்சார இன்ஜின் மூலம் ரயில் இயக்கி சோதனை செய்தார். முன்னதாக வழி யில் உள்ள பாலங்கள், ரயில்வே கேட்டுகள் ஆகி யவற்றில் ஏற்படுத்தப் பட்டுள்ள மின்சார வழங்கல் ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். இந்த புதிய மின் தடத்தில் பணியாற்றும்  ரயில் பாதை பராமரிப்பு பணி யாளர்கள் உரிய பயிற்சி கள் எடுத்துள்ளனரா மற்றும் பாதுகாப்பு விதிகள் தெரிந்  துள்ளனரா எனவும் சோதனை செய்தார். மேலும் ரயில் நிலையங்கள் மற்றும் முக்கிய இடங்களில் 25000 வோல்ட் மின்சாரம் பாயும் மின்தடத்தை பொது மக்கள், பயணிகள்  தொடவோ, நெருங்கவோ வேண்டாம் என எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளதா என வும் சோதனை செய்தார். ஆய்வில் அவருடன் முதன்மை மின் வழங்கல் துறை பொறியாளர் சுந்த ரேசன், ரயில் விகாஸ் நிகம்  லிமிடெட் முதன்மை திட்ட மேலாளர் கமலாகரரெட்டி, மின்துறை மேலாளர் ராம நாதன், மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்ம நாபன் அனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.