தேனி, ஜன.28- தேனி மாவட்டம், சமூக நலன் மற்றும் மகளிர் உரி மைத்துறையின் கட்டுப்பாட் டின் கீழ் செயல்பட்டு வரும் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லத் தின் செயல்பாடுகள் குறித்து ஜனவரி 28 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளீ தரன் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, தேனி மாவட்டத்தில் ஆத ரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்கள், பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய் யும் வகையில், தேனி மாவட்டம், தேனி சமதர்ம புரத்தில் அமைந்துள்ள மனித நேயம் குழந்தைகள் காப்ப கம் மற்றும் அரப்படித்தேவன் பட்டியில் உள்ள மனித நேயம் முதியோர் இல்லத் தையும் திடீர் ஆய்வு மேற் கொண்டு, தங்கியிருந்த குழந்தைகள் மற்றும் முதி யோர்களுடன் கலந்துரை யாடி, இல்லத்தின் அடிப் படை வசதிகள் மற்றும் இருப்பிட வசதிகளை மேம் படுத்த காப்பாளர்களிடம் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது, மாவட்ட சமூக நல அலுவலர் ஷியாமளா தேவி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்(பொ)சிவக் கமார் ஆகியோர் உடனி ருந்தனர். ஆட்சியரிடம் விவசாயிகள் புகார் கடமலை-மயிலை ஒன்றி யம் கண்டமனூர், கடம லைக்குண்டு, மயிலாடும் பாறை ஆகிய கிராமங்களில் செயல்பட்டு வரும் அரசு பள்ளி விடுதிகள் மற்றும் ரேசன் கடைகளிலும் சனிக் கிழமையன்று தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் ஆய்வு மேற்கொண்டார். மயிலாடும்பாறை கூட்டு றவு சங்க அலுவலகத்தில் விவசாய கடன் வழங்குவ தற்கு அதிக அளவில் பணம் வசூல் செய்யப்படுவதாக குமணன்தொழு பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஆட்சி யரிடம் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக உரிய விசா ரணை மேற்கொண்டு நட வடிக்கை எடுப்பதாக ஆட்சி யர் உறுதியளித்தார். இந்த ஆய்வின் போது திட்ட இயக் குனர் தண்டபாணி, கட மலை-மயிலை ஒன்றிய ஆணையர்கள் திருப்பதி முத்து, அய்யப்பன் உள் ளிட்ட அதிகாரிகள் உடனி ருந்தனர்.